ஆகஸ்ட் 11ம் தேதி மத்திய டெட் தேர்வு முடிவு

மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் ஆகஸ்ட் 11 ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

மத்திய பள்ளிக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ ஒவ்வொரு ஆண்டும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த 7ம் தேதி நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 20 லட்சத்து 84 ஆயிரத்து 174 பேர் எழுதினர். நாடு முழுவதும் 20 மொழிகளில் 104 நகரங்களில் இந்த தேர்வு நடந்தது

தேர்வு எழுதியவர்களில் 37 ஆயிரம் பேர் காது கேளாமை மற்றும் பேச இயலாதவர்கள். இதைத் தொடர்ந்து மேற்கண்ட தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைக் குறிப்பு கடந்த 26ம் தேதி சிபிஎஸ்இ இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுகான முடிவுகளை ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. தேர்வு எழுதிய நபர்கள் http://www.ctet.nic.in என்ற இணைய தளத்தில் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளவும் சிபிஎஸ்இ ஏற்பாடு செய்துள்ளது

Design a site like this with WordPress.com
Get started