DGE – தோல்வியுற்ற 11,12ஆம் வகுப்பு மாணவர்கள் அதே பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுதலாம்.

பழைய பாடத்திட்டத்தில் தேர்வில் தோல்வியுற்ற 11,12ஆம் வகுப்பு மாணவர்கள் அதே ( பழைய)  பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுதலாம். 2020ஆம் ஆண்டு மார்ச் 2 முதல் 24 வரை 12ஆம் வகுப்புக்கும், மார்ச் 4 முதல் 26 வரை 11ஆம் வகுப்புக்கும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு என தேர்வுத்துறை அறிவிப்பு. JOIN TELEGRAM GROUP LINK

பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முதல் பருவ புத்தகங்களை பெற்று புத்தக வங்கி தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

2019 – 2020 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வு முடிவுறும் நிலையில் முதல் பருவத்திற்குரிய அனைத்து வகுப்புகளுக்குரிய அனைத்து பாடப்புத்தகங்களையும் பயன்படுத்துவதற்கு உகந்த நிலையில் உள்ள பாட புத்தகங்களை மீண்டும் பயன்படுத்தும் வகையில் மாணவர்களிடமிருந்து புத்தகங்களை பள்ளியின் கடைசி வேலை நாளான்று பெற்று புத்தக வங்கியில் வகுப்பு மற்றும் பாட வாரியாக தொகுத்து பாதுகாத்து வைத்திடுமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

1 TO 5th Std Term 2 – All Subject Learning Outcomes ( LO ) Sheet 2019 Download ( Tamil And English Medium )

CLICK HERE JOIN TELEGRAM GROUP LINK Second Term  – New Book 1 TO 5th std Learning Outcomes Sheet 1st Standard – All Subject – Learning Outcomes ( LO ) Sheet – Tamil And English Medium-Click HERE 2nd Standard – All Subject –  Learning Outcomes ( LO ) Sheet – Tamil And English Medium-Click here 3rd StandardContinueContinue reading “1 TO 5th Std Term 2 – All Subject Learning Outcomes ( LO ) Sheet 2019 Download ( Tamil And English Medium )”

ஒரு மாதத்தில் தேர்வு அட்டவணை: டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் அறிவிப்பு

போட்டி தேர்வுகளுக்கான ஆண்டு அட்டவணை, ஒரு மாதத்தில் வெளியிடப்படும்’ என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது ♦♦இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன், செயலர் நந்தகுமார் அளித்த பேட்டி:அரசு பதவிகளுக்கான, ‘குரூப் – 2, குரூப் – 2 ஏ’ இரண்டுக்கும், ஒரே தேர்வு முறை அமலாக உள்ளது. முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவோருக்கு, பிரதான தேர்வு நடத்தப்படும். முன்பிருந்த, பொதுத்தமிழ் அல்லது ஆங்கில விடைத்தாளுக்கு பதில், முதல்ContinueContinue reading ஒரு மாதத்தில் தேர்வு அட்டவணை: டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் அறிவிப்பு

குரூப் 2 பாடத் திட்ட மாற்றத்தால் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே இனி தேர்ச்சி பெறமுடியும்-டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 பாடத் திட்ட மாற்றத்தால் கிராம புற மாணவர்கள் மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், புதிய மாற்றத்தால் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே இனி தேர்ச்சி பெறமுடியும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். குரூப் 2 பதவிகளுக்கு ஏற்கனவே எழுத்து தேர்வு உள்ள நிலையில் குரூப்ContinueContinue reading “குரூப் 2 பாடத் திட்ட மாற்றத்தால் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே இனி தேர்ச்சி பெறமுடியும்-டிஎன்பிஎஸ்சி”

அரசுப்பள்ளிகளில் பழைய கட்டடங்களை அகற்றும் பணிகள் 

அரசுப்பள்ளிகளில் உள்ள பழைய கட்டடங்களை அகற்றும் பணிகள் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் விரைந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மரக்கன்றினை நட்டுவைத்தார். தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், 280 கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் மற்றொரு திருமண மண்டபத்தில் நடைபெற்றContinueContinue reading “அரசுப்பள்ளிகளில் பழைய கட்டடங்களை அகற்றும் பணிகள் “

இணையதள கோளாறு காரணமாக ஆசிரியர் தேர்வு எழுத முடியாமல் திரும்பிச் சென்றனர்

சென்னை அடுத்த ஆவடியில் சர்வர் கோளாறு காரணமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுத முடியாமல் ஏராளமான தேர்வர்கள் திரும்பிச் சென்றனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு, ஆன்லைன் மூலமாக கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டையில் உள்ள ஆலிம் பொறியியல் கல்லூரியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு காலை மற்றும் மதியம் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தபட இருந்தது. சர்வர் கோளாறு காரணமாக காலையில் தேர்வுContinueContinue reading “இணையதள கோளாறு காரணமாக ஆசிரியர் தேர்வு எழுத முடியாமல் திரும்பிச் சென்றனர்”

LEARNING OUTCOMES NEW SYLLABUS 5TH STD ALL SUBJECTS

TERM 2 – 5TH STD – LEARNING OUTCOMES GENERAL TERM 2 – 5TH STD – LEARNING OUTCOMES TAMIL TERM 2 – 5TH STD – LEARNING OUTCOMES ENGLISH TERM 2 – 5TH STD – LEARNING OUTCOMES MATHS T/M TERM 2 – 5TH STD – LEARNING OUTCOMES MATHS E/M TERM 2 – 5TH STD – LEARNING OUTCOMESContinueContinue reading “LEARNING OUTCOMES NEW SYLLABUS 5TH STD ALL SUBJECTS”

பான் – ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிப்பு – டிச.31 கடைசி நாள்

வருமானக் கணக்கு தாக்கலுக்கான பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை அளிக்கப்பட்ட அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டு, செப்டம்பர் 30ஆம் தேதியை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்திருந்தது. அதற்கான கெடு நாளை மறுநாள் முடிவடையவுள்ளது. ஏற்கனவே காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டிருந்தது.  அதன்படி நாளை மறுநாளுக்குள் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கத் தவறுவோரின் பான் கார்டு பயனற்றுப் போகும் என கூறப்பட்டது. இந்நிலையில் பான்ContinueContinue reading “பான் – ஆதார் இணைக்க அவகாசம் நீட்டிப்பு – டிச.31 கடைசி நாள்”

குழந்தையை 3 மணி நேரம் முதுகில் சுமந்துகொண்டு பாடம் எடுத்த கல்லூரி பேராசிரியை

தன்னிடம் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவரின் குழந்தையை 3 மணி நேரமாக முதுகில் சுமந்துகொண்டு பாடம் எடுத்த கல்லூரி பேராசிரியைக்கு இணையவாசிகள் பாராட்டு மழை பொழிந்துள்ளனர் அமெரிக்காவில் உள்ள சார்ஜியா க்வினெட் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரமடா சிசோகோ. இவர் வழக்கம் போல் தனது மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்துள்ளார். அப்போது அவரிடம் படிக்கும் இளம்பெண் ஒருவர் தன்னிடம் கைக்குழந்தை இருப்பதாலும், அதனைக் கவனிக்க ஆள் இல்லை என்றும் அதனால் வகுப்புக்கு வருவது கடினம் என்றும்ContinueContinue reading “குழந்தையை 3 மணி நேரம் முதுகில் சுமந்துகொண்டு பாடம் எடுத்த கல்லூரி பேராசிரியை”

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

இன்னும் இரண்டு நாள்களே உள்ளன . கீழ்க்கண்ட லிங்க் மூலம் ஆதார் எண் பான் கார்டு இணைக்கலாம் https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html?lang=eng

உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா?

இந்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் (Assistant Professor) மற்றும் இளம் ஆராய்ச்சியாளர் (Junior Research Fellowship) போன்ற பணிகளில் சேர்வதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வான யுஜிசி நெட் (UGC NET) டிசம்பர் 2019-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிகள்:1. உதவிப் பேராசிரியர்கள் (Assistant Professor)2. இளம் ஆராய்ச்சியாளர்கள்(JRF) முக்கிய தேதிகள்:ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.10.2019, இரவு 11.50 மணி வரைஆன்லைனில்ContinueContinue reading “உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா?”

பொறியியல் கல்லூரிகளுக்கான அண்ணா பல்கலையின் அறிவிப்பாணை ரத்து

தனியார் பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை, திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பாணையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும்,கடந்த 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து பெற்றContinueContinue reading “பொறியியல் கல்லூரிகளுக்கான அண்ணா பல்கலையின் அறிவிப்பாணை ரத்து”

எம்.டெக். கட்டணம் உயருகிறது – ஐ.ஐ.டி. கன்வுசில் முடிவு

எம்.டெக் படிப்புக்கான கல்விக்கட்டணத்தை 900 விழுக்காடு வரை உயர்த்துவதற்கு ஐஐடி கவுன்சில் முடிவு செய்துள்ளது. மாணவர்களுக்கான மாத உதவித் தொகையையும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 2,400 ஐஐடி மாணவர்கள், தங்களது கல்வியை பாதியிலேயே நிறுத்தி விட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர், முதுகலைப் பட்டம் பயின்று கொண்டிருந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியானது. ஐஐடிக்களில் இடைநிற்றலைத் தவிர்க்கவும், எம்.டெக் கல்வி அமைப்பில் தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும் 3ContinueContinue reading “எம்.டெக். கட்டணம் உயருகிறது – ஐ.ஐ.டி. கன்வுசில் முடிவு”

அரசாணை எண் :165 பள்ளிக்கல்வி துறை நாள் : 17.09.2019 நீதிமன்றத்தின் நிறுத்திவைப்பு உத்தரவு

எத்தனையோ வழக்குகளில் தனி நீதிமன்றங்கள், டிவிசன் பெஞ்ச் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதனை அரசு நிறைவேற்றுவதில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, கல்வித்துறை செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகே, நீதிமன்றங்களின் உத்தரவை நடைமுறைப்படுத்த அரசு முன்வருகிறது.ஆனால் ஒரு வழக்கில்.. நீதிமன்றம் பிறப்பித்த ஒரு இடைக்கால உத்தரவை அடிப்படையாக வைத்து, அதனைத் தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த பொதுவிதியாக ஏற்படுத்திய அரசின் புலிப்பாய்ச்சல் வேகம் நீதிமன்றத்திற்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.. அரசாணை 165 யை எதிர்த்து ஒருவருமே வழக்குContinueContinue reading “அரசாணை எண் :165 பள்ளிக்கல்வி துறை நாள் : 17.09.2019 நீதிமன்றத்தின் நிறுத்திவைப்பு உத்தரவு”

BIG FLASH:-ஆசிரியர் தகுதித்தேர்வில் வென்றவர்களுக்கு அடுத்த வாரம் போட்டித் தேர்வு -அமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வில் வென்றவர்களுக்கு அடுத்த வாரம் போட்டித் தேர்வு நடத்தப்படும் முதுகலை ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தவித பிரச்னையும் இல்லை என ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தகுதி இல்லாத நபருக்கு ஆசிரியர் வேலை-DEO – உட்பட 7 பேர் மீது குற்றப்பிரிவு வழக்குப்பதிவு 

வேலூர் ஆம்பூரில் தகுதியில்லாமல் டெட் தேர்வெழுதி ஆசிரியையாக சேர்ந்த புகாரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியை, மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட 7 பேர் மீது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கல்வி அலுவலர் சாம்பசிவம், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்பூரில் உள்ள அரசு உதவிபெறும் இந்து மேல்நிலைப் பள்ளியில் பெண் ஆசிரியை பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது

அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு ஏன் தரக்கூடாது? : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு  அரசு மருத்துவ கல்லூரிகளில் ஏன் தனி இடஒதுக்கீடு வழங்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தமிழகத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் 207 இடங்கள் நிரப்பப்படாததால், அவை  நிர்வாக ஒதுக்கீட்டு  இடங்களாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்பக்கோரி கோவையை சேர்ந்த தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்* *இந்த வழக்குContinueContinue reading “அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு ஏன் தரக்கூடாது? : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி”

5, 8க்கு பொது தேர்வு உண்டா; இல்லையா?

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு உண்டா, இல்லையா என்பதில், குழப்பம் நீடிக்கிறது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது* *இதன்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது* *இதையடுத்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு நடத்தப்படும் என, தமிழக பள்ளி கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது* *இந்த அரசாணை,ContinueContinue reading “5, 8க்கு பொது தேர்வு உண்டா; இல்லையா?”

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நாள்குறிப்பேடு: பள்ளிக் கல்வித்துறை திட்டம்

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நாள்குறிப்பேடு(“டைரி’) வழங்கும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தவுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்கள், சீருடை, மிதிவண்டி, மடிக்கணினி உள்பட பல்வேறு வகையான விலையில்லா பொருள்கள் அரசின் சார்பில் வழங்கப்படுகின்றன. கடந்த கல்வியாண்டு முதல் மாநிலப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு கல்வியின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்களின் அறிவாற்றலையும், நினைவாற்றலையும் வளர்க்கவும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் புதிய பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன. அதேவேளையில் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாதContinueContinue reading “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நாள்குறிப்பேடு: பள்ளிக் கல்வித்துறை திட்டம்”

தமிழக அரசின் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் – அரசாணை வெளியீடு

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவித்து அரசாணை வெளியீடு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவுகளில் உள்ள பணியாளர்களுக்கு 10 சதவீத போனஸ் தொகை வரும் 30-ம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிப்பு.

Design a site like this with WordPress.com
Get started