15 கி.மீ. தேசியக் கொடி: புது சாதனை முயற்சி

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் நகரில் 15 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசியக் கொடியுடன் கூடிய மனிதச் சங்கிலி சாதனை முயற்சி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது

.என் தேசியக் கொடி தான் எனக்கு மிகவும் பிடித்தது என்ற கோஷத்துடன் நடத்தப்பட்ட இந்த தேசியக் கொடியுடன் கூடிய மனிதச் சங்கிலியில் 40 தன்னார்வ அமைப்புகள், பள்ளி மாணவர்கள், சிஆர்பிஎஃப் வீரர்கள், போலீஸார், உள்ளூர் மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

15 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசியக் கொடியுடன் கூடிய இந்த மனிதச் சங்கிலி லிம்கா மற்றும் கின்னஸ் சாதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Design a site like this with WordPress.com
Get started