பிளஸ் 2 அக மதிப்பீட்டு மதிப்பெண் :தேர்வு துறை உத்தரவு

அக மதிப்பீட்டு மதிப்பெண் விதிகளை, பிளஸ் 2 மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என, பள்ளிகளுக்கு, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு தேர்வு துறை இயக்குனர், உஷாராணி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பாடங்களுக்கான கருத்தியல் தேர்வுடன், அகமதிப்பீட்டு தேர்வும் நடத்தப்படுகிறது.

மாணவர்களின் வருகை பதிவு, கள பயணம், செயல் திட்டம், அக மதிப்பீட்டு தேர்வு உள்ளிட்டவற்றுக்கு, தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றனஇதற்காக, பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஒவ்வொரு மாணவருக்கும், வருகைப்பதிவு, 75 – 80 சதவீதம் இருந்தால், 1 மதிப்பெண்; 80 சதவீதத்துக்கு மேல் இருந்தால், 2 மதிப்பெண் வழங்கப்படும்.அதேபோல, ஆய்வக பதிவேடு பராமரிப்புக்கு தனியாக மதிப்பெண் வழங்கப்படும்.

இந்த விதிகளை முன் கூட்டியே மாணவர்களுக்கு, பள்ளி ஆசிரியர்கள் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Design a site like this with WordPress.com
Get started