தமிழகத்தில் அனைவரும் தேர்ச்சி பெறுவதால் புதிய கல்விக்கொள்கை குறித்து கவலைப்பட தேவையில்லை

தமிழகத்தில் 1 முதல் 8 வரை அனைவரும் தேர்ச்சி பெற்று வருவதால் புதிய கல்வி கொள்கை குறித்து கவலைப்பட தேவையில்லை’’ என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார் நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: மாணவர்களுக்கு லேப்டாப்பிற்கு அடுத்து டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை அரசு பள்ளியில் ஆங்கில மொழி கற்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. அந்த கட்டணத்தை ரத்து செய்ததுடன் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடக்கப்பள்ளியிலும் இன்னும் இரண்டு வாரத்தில் பயோமெட்ரிக் கொண்டுContinueContinue reading “தமிழகத்தில் அனைவரும் தேர்ச்சி பெறுவதால் புதிய கல்விக்கொள்கை குறித்து கவலைப்பட தேவையில்லை”

SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வட்டார வள மைய ஆதார் பதிவு மையம் – பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் பணி – சார்ந்து அறிவுரைகள் வழங்குதல் – சார்ந்து.!!!

பி.ஆர்க்., கவுன்சிலிங் நாளை துவக்கம்.!

பி.ஆர்க். படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நாளை துவங்குகிறது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. இதில் 83 ஆயிரத்து 396 இடங்கள் நிரம்பின. இதைத்தொடர்ந்து பி.ஆர்க். படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கை துவங்கியுள்ளது. இதில் 83 ஆயிரத்து 396 இடங்கள் நிரம்பின. இதைத்தொடர்ந்து பி.ஆர்க். படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கை துவங்கியுள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஆர்கிடெக் கல்லுாரிகளில் கவுன்சிலிங் வழியாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.ContinueContinue reading “பி.ஆர்க்., கவுன்சிலிங் நாளை துவக்கம்.!”

ஆசிரியர் பாெதுமாறுதல் கலந்தாய்வு புதிய அரசாணை விரைவில் வெளியீடு!!!

கலந்தாய்வு நடத்திட பல்வேறு குளறுபடிகளுடன் வெளியிடப்பட்ட அரசாணை நீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.* நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி புதிய அரசாணையானது விரைவில் வெளியிடப்படும். செப்.10 முதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும் மூன்றாண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற விதிமுறையானது தளர்த்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டாகியும் சிறப்பு பள்ளிகளில் கணினி ஆய்வகம் தொடங்கவில்லை: மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தவிப்பு

நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் சிறப்பு பள்ளிகளில் கணினி ஆய்வகம் தொடங்கவில்லை. இதனால், கணினி தொடர்பான கல்வியை பெற முடியாமல் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 76 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி கள் செயல்பட்டு வருகின்றன. இவற் றில், 21 அரசு சிறப்பு பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டப்பேரவையில் அறிவிக்கப் பட்டது. இதைதொடர்ந்து கணினி, மேஜை மற்றும்ContinueContinue reading “நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டாகியும் சிறப்பு பள்ளிகளில் கணினி ஆய்வகம் தொடங்கவில்லை: மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தவிப்பு”

தமிழகம் முழுவதும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 46 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் நூலகம்: அலுவலர்களுக்கு நூலகத் துறை உத்தரவு

தமிழகத்தில் குறைந்த மாணவர் களைக் கொண்ட 46 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆக.10-ம் தேதிக்குள் நூலகம் அமைக்க வேண்டும் என நூலகத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் மூலம் வேறு பள்ளி களுக்கு நியமிக்கப்பட்டு வரு கின்றனர். இதற்கிடையே, குறைந்த எண்ணிக்கை மற்றும் மாணவர் கள் இல்லாத அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு திட்ட மிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அத்தகைய பள்ளி களை மூடாமல்,ContinueContinue reading “தமிழகம் முழுவதும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 46 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் நூலகம்: அலுவலர்களுக்கு நூலகத் துறை உத்தரவு”

2 மாதங்களில் தொடக்கப்பள்ளிகளிலும் பயோமேட்ரிக் வருகைப்பதிவு முறை – அமைச்சர்

இன்னும் இரண்டு மாத காலத்தில் தொடக்கப்பள்ளிகளிலும் பயோமேட்ரிக் வருகைப் பதிவேடு முறை நடைமுறைப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்

ஆசிரியரிடம் ரூ.5 லட்சம் மோசடி ஒருவர் கைது; எஸ்.ஐ., மீது வழக்கு

தங்கக் காசுகள் வாங்கித் தருவதாக கூறி, ஆசிரியரிடம், 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டார்; எஸ்.எஸ்.ஐ., மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம், அஸ்தம்பட்டியைச் சேர்ந்தவர், உமாசங்கர், 34. இவர், ஜூன், 10ல், அப்போதைய போலீஸ் கமிஷனர் சங்கரிடம் அளித்த மனு:தனியார் பள்ளியில், ஆசிரியராக பணிபுரிகிறேன். நானும், சகோதரி ரம்யாவும், வீட்டில் டியூஷன் எடுக்கிறோம். எங்களிடம், சேலம், எஸ்.எஸ்.ஐ., ஆறுமுகம் மகன் படித்தார். ஆறுமுகத்துக்கும், எங்களுக்கும் பழக்கம் ஏற்பட்டது.மேச்சேரியைச் சேர்ந்த செந்தில்குமார்ContinueContinue reading “ஆசிரியரிடம் ரூ.5 லட்சம் மோசடி ஒருவர் கைது; எஸ்.ஐ., மீது வழக்கு”

பணிநிரந்தரம் எப்போது? 9 ஆண்டுகளாக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்!

5ஆண்டுகளில் மீதமுள்ள 16 மாதத்தில் நிறைவேற்றுமா தமிழக அரசு !. இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியது:- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பணிநியமனம் செய்த பகுதிநேர ஆசிரியர்கள் : தமிழகத்தில் 14வது சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தவுடன் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் 26.08.2011ல் அரசுப்ContinueContinue reading “பணிநிரந்தரம் எப்போது? 9 ஆண்டுகளாக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்!”

நல்லாசிரியர் விருது விதிகளில் மாற்றம்:பள்ளி கல்வி அமல்படுத்த கோரிக்கை

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, விண்ணப்பம் பெறும் போது, விதிகளில் மாற்றம் ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ல், நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. மத்திய – மாநில அரசுகளின் சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில், நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, ஆசிரியர் தேசிய விருதுக்கு, ஆன்லைனில் விண்ணப்ப பதிவு முடிந்து உள்ளது. மாநில விருதுக்கான விண்ணப்ப பதிவு குறித்து, இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில்,ContinueContinue reading “நல்லாசிரியர் விருது விதிகளில் மாற்றம்:பள்ளி கல்வி அமல்படுத்த கோரிக்கை”

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ‘சஸ்பெண்ட்

மாணவர்களிடம், பராமரிப்பு கட்டணம் வசூலித்த, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த, விண்ணமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட, மாணவ – மாணவியர் படிக்கின்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர், தேவராஜ், 50, பராமரிப்பு கட்டணம் எனக் கூறி, மாணவர்களிடம், பணம் வசூலித்துள்ளார். இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், நடராஜனிடம் புகாரளித்தனர்.விசாரணையில், தேவராஜ், முறைகேடாக, பணம் வசூலித்தது தெரிந்தது. இதையடுத்து அவர், தலைமை ஆசிரியர், தேவராஜை, ‘சஸ்பெண்ட்’ContinueContinue reading “அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ‘சஸ்பெண்ட்”

விரல் அசைவில் தமிழ் கற்கலாம்!: ஆசிரியையின் ‘வித்தை’

தமிழ் எழுத்துக்களை இப்படி கற்றுத்தர முடியுமா என, ஆச்சர்யப்பட வைக்கிறார், ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை குமுதா ராஜாமணி. கைவிரல் அசைவிலே குழந்தைகளின் மனதில் தமிழ் எழுத்துகளை பசுமரத்தாணிபோல் பதித்து வரும் இவர், நல்லாசிரியர் விருது பெற்றவரும்கூட. கொடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி, 2014ல் ஓய்வு பெற்று சென்னையில் செட்டிலாகிவிட்டார். தனது, 25 வருட கற்பித்தல் அனுபவத்தில், ஆய்வில், ‘விரல் அசைவு விளையாட்டு’ எனும் மொழிப்பயிற்சியை கண்டறிந்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு கொண்டு சேர்த்துContinueContinue reading “விரல் அசைவில் தமிழ் கற்கலாம்!: ஆசிரியையின் ‘வித்தை’”

பள்ளிக்கல்வித்துறையில் தமிழக அரசு பெருமளவு நிதியை பயன்படுத்தவில்லை என தலைமை கணக்காயர் தகவல்..!

கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான நிதியை தமிழக அரசு பயன்படுத்தவில்லை என தலைமைக் கணக்காயர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2013- 2014ம் நிதியாண்டிலிருந்து, 2017-18 நிதியாண்டு வரை தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் மொத்தம் 10 லட்சத்து 12 ஆயிரத்து 893 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் தலைமை கணக்காயர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்தContinueContinue reading “பள்ளிக்கல்வித்துறையில் தமிழக அரசு பெருமளவு நிதியை பயன்படுத்தவில்லை என தலைமை கணக்காயர் தகவல்..!”

ஏர்டெல் 3ஜி சேவை நிறுத்தம்!

நடப்பு நிதியாண்டு முதல் காலாண்டில் ரூ.2,866 கோடி இழப்பை சந்தித்துள்ள ஏர்டெல் நிறுவனம், நாடுமுழுவதும் 3ஜி சேவை நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக கொல்கத்தாவில் 3ஜி சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் 2020க்குள் நாடு முழுவதும் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதேநேரம் 2ஜி சேவை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் தடுப்பூசி முகாம்

அனைத்து பள்ளிகளிலும், தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி முகாம் நடத்த, பொது சுகாதார இயக்குனர், குழந்தைசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், தொண்டை அடைப்பான் நோய் பாதிப்புக்குள்ளாகி, பலர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், பொது சுகாதாரத் துறை இயக்குனர், குழந்தைசாமி, கோவை அரசு மருத்துவமனையில், நேற்று ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை கூட்டம் நடத்தினார். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர்கள் உட்பட, பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், அனைத்து பள்ளிகளிலும், தொண்டை அடைப்பான்ContinueContinue reading “அனைத்து பள்ளிகளிலும் தடுப்பூசி முகாம்”

இந்த மாதம் வங்கிகளுக்கு கூடுதல் விடுமுறை., வங்கி தொடர்பான திட்டங்களை விடுமுறைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுங்கள்!!.

பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை ஞாயிற்று கிழமைகள் மற்றும் மாதத்தின் 2 மற்றும் 4 வது சனிக்கிழமையில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த மாதம் சுதந்திர தினம், பக்ரீத், கிருஷ்ன ஜெயந்தி போன்ற பண்டிகைகள் உள்ளதால் கூடுதல் விடுமுறைகள் உள்ளன. இதனால் இந்த மாதத்தில் 5 சனிக்கிழமைகள் மற்றும் 4 ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன. அதன்படி, இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமையான ஆகஸ்ட் 10 மற்றும் ஆகஸ்ட் 24 ஆகிய தேதிகள் வங்கி விடுமுறையாகும். ஆகஸ்ட் 12 ஆம் தேதி பக்ரீத்ContinueContinue reading “இந்த மாதம் வங்கிகளுக்கு கூடுதல் விடுமுறை., வங்கி தொடர்பான திட்டங்களை விடுமுறைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுங்கள்!!.”

Design a site like this with WordPress.com
Get started