கேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக வாய்ப்பு!

சிபிஎஸ்சி நடத்தும் டிசம்பர் மாதத்திற்கான சிடெட் (CTET) எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வில் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரைக்கான ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன முக்கிய தேதிகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 19.08.2019 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.09.2019 தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசிContinueContinue reading “கேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக வாய்ப்பு!”

குரூப் 4 தேர்வு: ஓரிரு நாள்களில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு

குரூப் 4 தேர்வுக்கு 10 நாள்களே உள்ள நிலையில் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் ஓரிரு நாள்களில் தயாராகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராம நிர்வாக அலுவலருடன் இணைந்த குரூப் 4 தொகுதிக்கான காலிப் பணியிடங்களுக்கு, வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை சுமார் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதவுள்ளனர். தேர்வு எழுதுவோருக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. தேர்வுக்கு இன்னும் 10 நாள்களேContinueContinue reading “குரூப் 4 தேர்வு: ஓரிரு நாள்களில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு”

உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கும் சிறப்பாசிரியர் பணி வழங்க அரசு பரிசீலிக்கலாம்: நீதிமன்றம் உத்தரவு

உடற்கல்வி சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு படித்தவர்கள் உடற்கல்வி சிறப்பாசிரியர்களாக தகுதியானவர்களாகக் கருதி, ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டவர்களுடன் இணைந்து இவர்களுக்கும் பணி வழங்க பரிசீலிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தமிழகத்தில் உள்ள சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 2017-இல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து 2017 செப்டம்பரில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 632 பேரின் பெயர் பட்டியல் வெளியானது. இந்த தேர்வில் பலருக்குContinueContinue reading “உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கும் சிறப்பாசிரியர் பணி வழங்க அரசு பரிசீலிக்கலாம்: நீதிமன்றம் உத்தரவு”

1½ லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு: 10 நாட்களுக்குள் கலந்தாய்வு அமைச்சர் தகவல்

ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதிய ஆசிரியர் தகுதி முதல் தாள் தேர்வு முடிவு நேற்று வெளியானது. இன்னும் 10 நாட்களுக்குள் கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் கற்றுக்கொடுக்கும் தகுதியிலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.)ContinueContinue reading “1½ லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு: 10 நாட்களுக்குள் கலந்தாய்வு அமைச்சர் தகவல்”

இனி ATM Card களுக்கு வேலை இல்லை, மொபைல் மூலம் பணம் எடுக்கலாம் SBI அறிவிப்பு

பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஏ.டி.எம். கார்டுகளை ரத்து செய்ய பாரத் ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ஏ.டி.எம் எந்திரங்களிலும் யோனோ வசதி கொண்டுவரப்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினீஸ் குமார் தெரிவித்துள்ளார். பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஏ.டி.எம்.கார்டுகளை ரத்து செய்ய பாரத் ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ஏ.டி.எம் எந்திரங்களிலும்ம் யோனோ வசதி கொண்டுவரப்படும். இந்த வசதியை பயன்படுத்த ஷயோனோ’ கேஷ் அப்ளிகேஷனைContinueContinue reading “இனி ATM Card களுக்கு வேலை இல்லை, மொபைல் மூலம் பணம் எடுக்கலாம் SBI அறிவிப்பு”

ஆயிரத்து 316 பள்ளிகளில் ‘பயோ-மெட்ரிக்

திண்டுக்கல்லில் உள்ள ஆயிரத்து 316 அரசு பள்ளிகளுக்கு பயோ- மெட்ரிக் வருகை பதிவு கருவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்ய ‘பயோ-மெட்ரிக்’ வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு பள்ளிகளுக்கு பயோ-மெட்ரிக் கருவி வழங்கப்பட்டுள்ளது. அதில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் தங்கள் வருகையை பயோ-மெட்ரிக் கருவியில் கட்டாயம் பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக திண்டுக்கல்லில் உள்ளContinueContinue reading “ஆயிரத்து 316 பள்ளிகளில் ‘பயோ-மெட்ரிக்”

பிஎச்.டி. சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம்: விரைவில் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை

பிஎச்.டி., எம்.ஃபில். போன்ற ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை, நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நடத்துவது விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது. அதுவும், நுழைவுத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பிஎச்.டி. சேர்க்கைக்கு தகுதி பெறுவர். தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற சில பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே, பிஎச்.டி. மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்றபோதும், பல பல்கலைக்கழகங்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றுவதில்லை. இந்தச் சூழலில் நாட்டில்ContinueContinue reading “பிஎச்.டி. சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம்: விரைவில் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை”

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு: இன்று மறுகூட்டல் முடிவுகள்

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளன. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வெழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 771 ஆகும். இதில் மறுகூட்டலுக்கு 920 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதைத் தொடர்ந்து மறு கூட்டல் செய்யப்பட்ட விடைத்தாள்களின் எண்ணிக்கை 1,898 ஆகும். மதிப்பெண் மாற்றம்ContinueContinue reading “பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு: இன்று மறுகூட்டல் முடிவுகள்”

பாட திட்டம் விரைவில் மாற்றம்

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சிலான, ஐ.சி.எஸ்.இ.,யின் பாட திட்டம் விரைவில் மாற்றப்பட உள்ளது. இந்தியாவில், அனைத்து மாநிலங்களின் பாட திட்டங்களும், தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன சி.பி.எஸ்.இ., பாட திட்டமும், தேசிய கல்வி கொள்கையின் கீழ், தேசிய கல்வியியல் கவுன்சிலால் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் என்ற, ஐ.சி.எஸ்.இ., பாட திட்டம், தேசிய கல்வி கொள்கையின் கீழ் வராமல், தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றின் தேர்வுகளும், மாணவர்கள் சேர்க்கையும், தனியாக நடத்தப்படுகின்றன .இந்தContinueContinue reading “பாட திட்டம் விரைவில் மாற்றம்”

எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அவசரகோலத்தில் அரசின் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட (ஐ.சி.டி.எஸ்.) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் நிகழ் கல்வியாண்டில் தொடங்கப்பட்டுள்ள மாண்டிசோரி கல்வி அடிப்படையிலான எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள், எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தொடங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் இருமொழிக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டாலும், தாய்மொழிக் கல்வியை கற்கும் மாணவர்களைவிட ஆங்கில மொழி வழியில் பயில்வதில் மாணவர்கள் அதிக விருப்பம் கொள்கின்றனர். மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆங்கில மொழி மீது இருக்கும் மோகம் காரணமாக தங்களது பொருளாதார நிலை எதுவாக இருப்பினும், அதிகContinueContinue reading “எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அவசரகோலத்தில் அரசின் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள்”

பள்ளிகள் முடியும் நேரம் மாறுது!

திருப்பூரில் செயல்படும் அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் நிறைவு நேரத்தை மாற்றுவது குறித்து விரைவில் முடி வெடுக்கப்பட உள்ளது.திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் பிரதானமாக உள்ளது. அவிநாசி ரோடு, பி.என்., ரோடு, பல்லடம் ரோடு ஆகிய முக்கிய ரோடுகளில் ‘பீக் ஹவர்’களில், ஒவ்வொரு நாளும் நெரிசல் அதிகரிக்கிறது. பள்ளி வேலை நாட்களில், பள்ளி துவங்குவதற்கு முன், காலை, 7:30 முதல், 9:00 மணி வரை. மாலை, 4:00 முதல் 5:30 மணி வரை இந்த ரோடுகள் ஸ்தம்பித்துவிடுகின்றன. சமீபத்தில்ContinueContinue reading “பள்ளிகள் முடியும் நேரம் மாறுது!”

9,பிளஸ் 1 வகுப்புகளுக்கு வேறு பாடங்கள் நடத்த கூடாது: பள்ளிகளுக்கு எச்சரிக்கை

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடங்களை மட்டுமே பள்ளிகள் நடத்த வேண்டும். அதைவிட்டு வேறு பாடங்களை நடத்தினால் அந்த மாணவர்கள் அடுத்த தேர்வை எழுத அனுமதி கிடைக்காது என்று சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாகவே அதற்குரிய பாடங்களை நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக 9ம் வகுப்பில் படிக்கும்ContinueContinue reading “9,பிளஸ் 1 வகுப்புகளுக்கு வேறு பாடங்கள் நடத்த கூடாது: பள்ளிகளுக்கு எச்சரிக்கை”

ஆசிரியர் பயிற்சிக்கான “உலகின் மிகப்பெரிய திட்டம்” :42 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஆசிரியர் பயிற்சிக்கான “உலகின் மிகப்பெரிய திட்டம்” தொடங்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது .டெல்லியில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, ஆசிரியர் பயிற்சிக்கான “உலகின் மிகப்பெரிய திட்டம்” தொடங்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், “இந்தியா தரமான கல்வி மற்றும் ஆசிரியர்களை உருவாக்குவதில் முதன்மை வாய்ந்த பாரம்பரியம் கொண்ட நாடாகContinueContinue reading “ஆசிரியர் பயிற்சிக்கான “உலகின் மிகப்பெரிய திட்டம்” :42 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி”

பள்ளிகளில் புதிய முயற்சி கற்பிக்கும் திறனை மேம்படுத்த ஆசியர்களுக்குள் கலந்துரையாடல்

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 32 மேல்நிலைப் பள்ளிகள், 37 உயர்நிலைப் பள்ளிகள், 93 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் அடங்கும். இந்த பள்ளிகளில் 85 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பல்வேறு பணிகளை செய்துவருகிறது. அதன்படி உட்கட்டமைப்பு மேம்பாட்டு குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ₹100 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில்ContinueContinue reading “பள்ளிகளில் புதிய முயற்சி கற்பிக்கும் திறனை மேம்படுத்த ஆசியர்களுக்குள் கலந்துரையாடல்”

சிபிஎஸ்இ அறிவிப்பு டிச.8ம் தேதி மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 8ம் தேதி நடக்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியாக உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய பள்ளிக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வருகிறது. இதுவரை 12 தேர்வுகளை நடத்தி முடித்துள்ள நிலையில்ContinueContinue reading “சிபிஎஸ்இ அறிவிப்பு டிச.8ம் தேதி மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு”

IRCTC Tatkal Booking : ஊருக்கு செல்ல தட்கல் டிக்கெட் புக் செய்பவர்கள் கவனத்திற்கு.

irctc tatkal booking time : வெளியூர் செல்ல கடைசி நிமிடத்தில் பயணம் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, தட்கல் டிக்கெட் மிகப்பெரும் உதவியாக இருந்து வருகிறது.அவசர தேவைக்கும் இறுதி நிமிட பயணத்திற்கும் இந்திய ரயில்வேயின் irctc.co.in தளத்தில் இந்தத் தட்கல் டிக்கெட்டைப் பதிவு செய்துக் கொள்ளலாம். இது பயணிகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. irctc tatkal booking online: புக் செய்வது எப்படி? 1. குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்லும் ரயில்கள் ஏதும் இல்லைContinueContinue reading “IRCTC Tatkal Booking : ஊருக்கு செல்ல தட்கல் டிக்கெட் புக் செய்பவர்கள் கவனத்திற்கு.”

மொபைல் டேட்டா காலியாவதை தடுக்க ஒரு சின்ன யோசனை

நம்மில் பலருக்கு மொபைல் போனில் நெட்டை பயன்படுத்தாமலேயே மொபைல் டேட்டா காலியாகிறதா? என்ன காரணம்? சரி செய்வது எப்படி? இது குறித்த ஒரு சின்ன யோசனை. 2ஜிபி, 5ஜிபி என்று ரீசார்ஜ் செய்தால் மட்டும் போதாது! அதை சரியாக பயன்படுத்த தெரிய வேண்டும்! பயன்படுத்தாமலேயே மொபைல் டேட்டா காலியாகிறதா? என்ன காரணம்?சரி செய்வது எப்படி? 100எம்பி அளவிலான டேட்டாவை ஒரு மாதம் முழுக்க ‘பொத்திப்பொத்தி’ பாதுகாத்த காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் மதிய உணவு இடைவேளை வருவதற்குContinueContinue reading “மொபைல் டேட்டா காலியாவதை தடுக்க ஒரு சின்ன யோசனை”

காமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை பட்டப்படிப்புகளில் தமிழ் உள்ளிட்ட பல பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மதுரையில் நேற்று காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பின் செயலாளர் பேராசிரியர் முரளி கூறியதாவது: மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை தமிழ், காந்திய சிந்தனை, உளவியல், தத்துவம் மற்றும் சமயம், மனித உரிமை கல்வி, மகளிரியல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட முதுகலை பட்டப்படிப்புகள் இருந்தன. இந்த முதுகலை பட்டப்படிப்புகள் நடப்பாண்டு முதல்ContinueContinue reading “காமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்”

வருகிற 1ம் தேதி குரூப் 4 தேர்வு :TNPSC புதிய அறிவிப்பு

வருகிற 1ம் தேதி குரூப் 4 தேர்வு நடக்கிறது. தேர்வு கூடத்துக்கு செல்போன், மோதிரம் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் (குரூப் 4 பதவி) அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் 397 பணியிடங்கள், இளநிலை உதவியாளர்(பிணையமற்றது) 2688, தட்டச்சர், இளநிலை உதவியாளர்(பிணையம்)-104, வரிதண்டலர் (கிரேடு 1)-34, நில அளவர்-509, வரைவாளர்-74, தட்டச்சர்-1901, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3)-784 என மொத்தம்ContinueContinue reading “வருகிற 1ம் தேதி குரூப் 4 தேர்வு :TNPSC புதிய அறிவிப்பு”

அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்

தமிழகத்தில் 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. உரிய திட்டமிடல் இல்லாததால் ஏற்பட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு இன்னும் இந்தாண்டு நடைபெறவில்லை. தமிழகத்தில் பள்ளிகள் திறந்து இரண்டரை மாதமாகியும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் மாவட்டத்திற்கு 60க்கும் மேல் வீதம் காலியாக இருப்பதால் மாணவ மாணவியர் கடும் அவதிப்பட ெதாடங்கியுள்ளனர். தமிழகத்தில் 11ம், 12ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு பல பிரிவுகளுக்கு இதுவரை பாடம் எடுக்கப்படாததால் மாணவ மாணவியரும், பெற்றோரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும்ContinueContinue reading “அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்”

Design a site like this with WordPress.com
Get started