குறுவட்ட போட்டியில் கலக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள் – ஒரே பள்ளியை சேர்ந்த 123 பேர் வெற்றி

மாவட்ட அளவில் நடைபெற்ற குறுவட்ட போட்டியில் திருமங்கலம் அரசுப் பள்ளி மாணவிகள் 123 பேர் வெற்றி பெற்றுள்ளனர். டீ கல்லுப்பட்டி தனியார் பள்ளியில், உசிலம்பட்டி கல்வி மாவட்ட குறுவட்ட போட்டி நடைபெற்றது இதில் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர் கபடி வாலிபால் எறிபந்து இறகுப்பந்து வளையப்பந்து தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கல்வி மாவட்டத்திலிருந்து 27 பள்ளிகள் பங்கேற்றன இதில் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மாணவிகள் தடகளப் போட்டியில் 3 தங்கப்பதக்கம் 18 வெள்ளிப்பதக்கம் 6 வெங்கல பதக்கம் என 27 பேர் சாதனை படைத்தனர் மேலும் குழு போட்டியில் 96 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Design a site like this with WordPress.com
Get started