தமிழகம் முழுவதும் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் ஒன்றைக்கூட மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என சமூகநலம் மற்றும் சத்துணவு துறை அமைச்சர் சரோஜா கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், நீர்நிலைகளின் தன்மை குறித்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சரோஜா, செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
