பள்ளிகளில் முதல் நாளில் புத்தகங்கள் வழங்க அறிவுறுத்ததல்

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இரண்டாம் பருவ பாடநூல்களை காலாண்டு விடுமுறைக்குப் பின் முதல் நாளில் வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையில் நோட்டுப் புத்தகங்களும் இரண்டாம் பருவ பாடநூல்களும் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் நோட்டுப்புத்தகங்கள் மற்றும் பாடப் புத்தகங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கவும், காலாண்டு விடுமுறைக்குப் பின் மாணவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளில் அவற்றை மாணவர்களுக்கு வழங்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Design a site like this with WordPress.com
Get started