DSE – தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்கள் – பணிவரன்முறை செய்து ஆணை

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி – 01.01.2018 ஆம் ஆண்டு முன்னுரிமைப் பட்டியலின்படி பதிவி உயர்வு மூலம் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்கள் – பணிவரன்முறை செய்து ஆணை வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். Click here-HSS HM REG ORDER

சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஹோமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் சார்பில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 5 அரசு சித்தா கல்லூரிகள் மற்றும் 20 தனியார் சித்தா கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசு கல்லூரிகளில் 318 இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் 720 அரசு ஒதுக்கீடு இடங்கள் என மொத்தம் 1038 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தில் இன்று முதல்ContinueContinue reading “சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஹோமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்”

காலியாகவுள்ள வகுப்பறைகளை சாரண, சாரணியர்களுக்கு ஒதுக்க நடவடிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள வகுப்பறைகளை சாரண, சாரணிய மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள உத்தரவிட வேண்டுமென முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்போவதாக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,  படிப்பை தாண்டிContinueContinue reading “காலியாகவுள்ள வகுப்பறைகளை சாரண, சாரணியர்களுக்கு ஒதுக்க நடவடிக்கை”

கல்வி தொழில் நுட்பத்தில் NEAT” என்ற புதிய திட்டம் அறிமுகம்

கல்வித் தொழில்நுட்பத்தை மேம்படுத்த அரசுடன் இணைந்து செயல்பட முன்வருமாறு தனியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. கல்வியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம், மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் தனித்திறனை மேம்படுத்தும் நோக்கில் “NEAT” ( National Educational Alliance Technology )என்ற புதிய திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தொடங்கியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலமாக, கற்றல் மற்றும் கற்பித்தலில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்தி சிறப்பான கல்வியை வழங்கி வரும்ContinueContinue reading “கல்வி தொழில் நுட்பத்தில் NEAT” என்ற புதிய திட்டம் அறிமுகம்”

PG TRB முதுநிலை ஆசிரியர் பணிக்கான ஆன்லைன் தேர்வுகள்: 154 மையங்களில் இன்று தொடக்கம்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகின்றன. முறைகேடுகளை தவிர்க்க தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை}1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை 1 லட்சத்து 22 ஆயிரத்து 80 பெண்கள், 8 திருநங்கைகள் உட்பட மொத்தம் ஒரு லட்சத்து 85ContinueContinue reading “PG TRB முதுநிலை ஆசிரியர் பணிக்கான ஆன்லைன் தேர்வுகள்: 154 மையங்களில் இன்று தொடக்கம்”

ஒரே தலைமையாசிரியர் கண்காணிப்பதால் கல்வித்தரம் உயரும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஒரே தலைமை ஆசிரியர் கண்காணிப்பதால் கல்வித் தரம் உயரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”ஒரே வளாகமாக இருக்கும் பள்ளியில், ஒற்றைத் தலைமை ஆசிரியர் கண்காணிப்பதால் கல்வித்தரம் உயரும். அங்கே நடைபெறும் கல்விப் பணிகளைக் கண்காணித்து, அறிவுரை வழங்க, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வரின் அனுமதியோடு, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தை ஒருங்கிணைக்கவும் ஆய்வு செய்து ஆசிரியர்கள்ContinueContinue reading “ஒரே தலைமையாசிரியர் கண்காணிப்பதால் கல்வித்தரம் உயரும்: அமைச்சர் செங்கோட்டையன்”

MBC இன மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்க கடைபிடிக்கப்படும் நடைமுறையை, SC இன மாணவியருக்கும் கடைபிடிக்க, தற்போது உள்ள விண்ணப்பத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சரின் தனிப்பிரிவு கோரிக்கைக்கு ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் பதில்!

முன்னறிவிப்பு இன்றி பள்ளி நிரந்தரமாக மூடப்பட்டதால் மாணவ, மாணவியர் தவிப்பு

புதுச்சேரியில் தனியார் பள்ளி ஒன்று முன்னறிவிப்பின்றி நிரந்தரமாக மூடப்பட்டதால் 380 மாணவ, மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். காலாப்பட்டுவில் செயல்பட்ட அமலா தனியார் மேல்நிலை பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வந்தனர். இந்த நிலையில் அந்த பள்ளி நிரந்தரமாக மூடப்பட்டு இருப்பதாகவும் மற்ற தகவல்களுக்கு கல்வித்துறையை அணுகுமாறும் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கண்டு மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் காலாப்பட்டு காவல்நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார்ContinueContinue reading “முன்னறிவிப்பு இன்றி பள்ளி நிரந்தரமாக மூடப்பட்டதால் மாணவ, மாணவியர் தவிப்பு”

விடுமுறை நாட்களில் பள்ளிகளில் பாரம்பரிய, கலாச்சார வகுப்புகள் – அமைச்சர்

விடுமுறை நாட்களில் ஓய்வுபெற்ற தமிழாசிரியர்களை கொண்டு பண்பாடு, கலாச்சாரம் தொடர்பாக பள்ளிகளில் வகுப்பு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒவ்வொரு துறையிலும், இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் பாடம் நடத்தும் திட்டம், அடுத்த மாத இறுதிக்குள் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.\ மேல்நிலைப் பள்ளிகளுக்கு 20 கணினிகளும், உயர்நிலைப் பள்ளிகளுக்குContinueContinue reading “விடுமுறை நாட்களில் பள்ளிகளில் பாரம்பரிய, கலாச்சார வகுப்புகள் – அமைச்சர்”

பள்ளிகளில் முதல் நாளில் புத்தகங்கள் வழங்க அறிவுறுத்ததல்

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இரண்டாம் பருவ பாடநூல்களை காலாண்டு விடுமுறைக்குப் பின் முதல் நாளில் வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில் நோட்டுப் புத்தகங்களும் இரண்டாம் பருவ பாடநூல்களும் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் நோட்டுப்புத்தகங்கள் மற்றும் பாடப் புத்தகங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குContinueContinue reading “பள்ளிகளில் முதல் நாளில் புத்தகங்கள் வழங்க அறிவுறுத்ததல்”

பள்ளி தலைமை ஆசிரியரை மீது மாணவனின் தந்தை தாக்குதல்..!

புதுச்சேரியில் தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மற்ற மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணியாற்றி வரும் 10ம் வகுப்பு கணித ஆசிரியை, அங்கு பயிலும் மாணவர் ஒருவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், தனது தந்தையை பள்ளிக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது, மாணவனின் தந்தை, தலைமை ஆசிரியரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியர்களுக்கு பாதுகாப்பில்லைContinueContinue reading “பள்ளி தலைமை ஆசிரியரை மீது மாணவனின் தந்தை தாக்குதல்..!”

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைக்கும் திட்டமில்லை – அரசு விளக்கம்

ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைக்கும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உள்ளது. மத்திய அரசின் மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் ஓய்வு பெறும் வயது 65ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மையை சமாளிப்பதற்கு, மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைப்பதற்கு பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை முடிவெடுத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. 60 வயதைContinueContinue reading “அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைக்கும் திட்டமில்லை – அரசு விளக்கம்”

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 5 விருப்பப் பாடம் அறிமுகம்

முதுநிலைப் பொறியியல் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக 5 பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பரிந்துரையின்பேரில் யோகா, இந்திய அரசியலமைப்பு, தத்துவயியல் உள்ளிட்ட 5 பாடங்கள் விருப்பப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 5 பாடங்களில் மாணவர்கள் ஏதேனும் ஒன்றை விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து படித்துக்கொள்ளலாம் என்றும் இந்த வகுப்புகளுக்கு மாணவர்கள் வர வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விருப்பப் பாடங்களுக்கு தேர்வோ மதிப்பெண்களோ கிடையாது என்றும்ContinueContinue reading “முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 5 விருப்பப் பாடம் அறிமுகம்”

நீட் பயிற்சியில் காணொளிக் காட்சிகள் மூலம் புதிய பயிற்சிகள் – அமைச்சர் செங்கோட்டையன்

நீட் பயிற்சியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காணொளிக் காட்சிகள் மூலம் புதிய பயிற்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் சி.பி.எஸ்.இ. பள்ளி மேனேஜ்மேண்ட் அசோசியேஷன் சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார். இலவச மற்றும் கட்டாய படிப்பு சட்டத்தின் கீழ் அணைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்ContinueContinue reading “நீட் பயிற்சியில் காணொளிக் காட்சிகள் மூலம் புதிய பயிற்சிகள் – அமைச்சர் செங்கோட்டையன்”

FLASH NEWSஆசிரியர் படிப்பு தேர்வு(பி.எட்) முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) இளநிலை ஆசிரியர் பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. மாணவ, மாணவியர்கள் இதனை tnteu.ac.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் தமிழகத்த்தில் ஆசிரியர் கல்விக்கான பி.எட் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம் நேரடியாக TNTEU B.Sc B.Ed முடிவுகளை பார்ப்பதற்கு இங்கு க்ளிக் செய்யவும். அல்லது பின்வரும்ContinueContinue reading “FLASH NEWSஆசிரியர் படிப்பு தேர்வு(பி.எட்) முடிவுகள் வெளியீடு!”

உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது

கலை, அறிவியல் மற்றும் பொறியியல் உயர்கல்வி சேர்க்கை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமான சரிந்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2018-19 ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 310 பக்கங்கள் கொண்ட அந்த ஆய்வறிக்கையில், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் உயர்கல்வி படிப்புகளில், மாணவர் சேர்க்கை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-15 ஆண்டில் பி.இ., பி.டெக்., படிப்புகளில் 42 லட்சத்து 54 ஆயிரத்து 919ContinueContinue reading “உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது”

விரைவில் பங்குச் சந்தையில் முதலீடு-PF பணம்

வருங்கால வைப்பு நிதி (PF) சந்தாதாரர்கள் தங்கள் முழு PF பணத்தை தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அரசாங்கம் விரைவில் அனுமதிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது! இது தவிர, ஊழியர்கள் ஒரு புதிய வேலையில் சேரும்போது அவர்கள் EPF திட்டத்தை தேர்வு செய்ய விரும்புகிறீர்களா அல்லது NPS திட்டத்தை தேர்வு செய்கிறார்களா என்பது குறித்து தெரிவு செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள் இந்த யோசனை தொடர்பாகContinueContinue reading “விரைவில் பங்குச் சந்தையில் முதலீடு-PF பணம்”

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுகள், வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைனில் நடத்தப்படும் – TRB தலைவர் லதா

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுகள், வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைனில் நடத்தப்படும் என ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய தலைவர் லதா தெரிவித்துள்ளார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 27,28 மற்றும் 29 தேதிகளில் நடைபெறும் இந்த தேர்வுக்கென தமிழகத்தில் 154 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  இந்த தேர்வினை 8 திருநங்கைகள் உள்பட ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 463 பேர் எழுத உள்ளதாகவும், தேர்வுகள் 100 சதவீதம் வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைனில் நடத்துவதற்கான ஏற்பாடுகள்ContinueContinue reading “முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுகள், வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைனில் நடத்தப்படும் – TRB தலைவர் லதா”

TRB  ஹால்டிக்கெட் குளறுபடி அதிர்ச்சியில் தேர்வர்கள்

அரசுப்பள்ளி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) ஹால்டிக்கெட்டில் குளறுபடிகள் இருப்பதால் தேர்வர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் இத்தேர்வு செப். 27 ல் நடக்க உள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அனுப்பன் குளத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சரஸ்வதி விண்ணப்பத்தில் விருதுநகர், திருநெல்வேலி, மதுரை என தேர்வு மையங்களை குறிப்பிட்டிருந்தார் ஆனால் அவருக்கு ஈரோடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டில் விக்னேஷ்வரி என்ற கையெழுத்து உள்ளது. இதேபோல் பலருக்கு அதிக துாரங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன சரஸ்வதி கூறுகையில்,”ஹால்டிக்கெட்டில் வேறு ஒருவரின்ContinueContinue reading “TRB  ஹால்டிக்கெட் குளறுபடி அதிர்ச்சியில் தேர்வர்கள்”

CBSE  மாதிரி வினாத்தாள் வெளியீடு

சி..பி.எஸ்.இ., பள்ளிகளில் பொதுத் தேர்வுக் கான, மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப் பட்டு உள்ளன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த பொதுத் தேர்வில் இடம் பெற உள்ள கேள்விகள் குறித்து, மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் வகையில், மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள், சி.பி.எஸ்.இ.,யின், http://cbse.nic.in என்ற இணையதளத்தில், வினாத்தாள்களை தெரிந்து கொள்ளலாம்*

அரசு பள்ளிகளில் அறிமுகமாகும் விளையாட்டு முறை கல்வி

💥💥20 கிராமப்புற பள்ளிகளில் நடந்த முன்னோட்ட ஆய்வில் பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்ததால், விளையாட்டு முறை கல்வியை, அனைத்து அரசு பள்ளிகளிலும் அமலுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது 💥💥நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் மாணவர்கள் குறித்து, `பிராத்தம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டும் தமிழகத்தின் மதுரை உள்பட நாடு தழுவிய ஆய்வினை மேற்கொண்டது. கிராமப்புற பகுதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் பல்வேறுContinueContinue reading அரசு பள்ளிகளில் அறிமுகமாகும் விளையாட்டு முறை கல்வி

Design a site like this with WordPress.com
Get started