அரசு ஊழியர்களுக்கு தற்போதுள்ள புதிய சம்பள பட்டியல் பிரச்னை தொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். Click here join telegram group link இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம், சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து அரசு ஊழியர்களின் துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம், நீதிமன்ற ஊழியர்கள், கருவூல ஊழியர்கள் என தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு வெளியிட்ட புதிய சம்பளContinueContinue reading “புதிய சம்பள பட்டியல் விவகாரம்: அரசு பணியாளர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்”
Monthly Archives: September 2019
பணிநிரந்தரம் வேண்டி முதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கருணை மனு:-
கருணை மனு குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:- மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கடந்த 2012 ம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஓவியம் கணினி இசை தையல் தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன்கல்வி ஆகிய கல்விஇணைச்செயல்பாடு பாடங்களில் தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு 16 ஆயிரத்துது 549 பகுதிநேர ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறையில் தற்காலிக பணியிடங்களில் பணிபுரிந்துவந்த 19 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்களின்ContinueContinue reading “பணிநிரந்தரம் வேண்டி முதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கருணை மனு:-“
இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் ஆணைக்கு மதுரை கிளை நீதிமன்றத்தில் தடையாணை பெற்று மீண்டும் பணிபுரிந்த பள்ளியிலேயே பணியேற்க அனுமதி!
திருவிடைமருதூர் ஒன்றியம் வட்டார கல்வி அலுவலக நிர்வாகத்திற்கு உட்பட்ட கீழ்கண்ட ஆசிரியர்களுக்கு 01.08.2018 மாணவர் எண்ணிக்கையின் படி உபரி இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிநிரவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பார்வை 2ல் காணும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து 16.09.2019ல் தடையாணை பெற்று மீளவும் அதே பள்ளியில் பணியாற்றிட அனுமதி பெற்றுள்ளதை தொடர்ந்து கீழ்காணும் ஆசிரியர்கள் 18.09.2019 முற்பகல் முதல் மீளவும் அதே பள்ளியில் பணியில் சேர அனுமதிக்கப்படுகிறது.
இளையோர்- மூத்தோர் ஊதிய முரண்பாடு களைதல் – புதிய படிவங்களில் கருத்துருக்கள் அனுப்புதல் சார்ந்த அரசு கடிதம்நாள் : 03.09.2019
SENIOR JUNIOR – Rectification Of Pay Anomaly To Government Servants – New Instructions – Chief Secretary Letter Click here Rectification of pay anomaly Forms pdf
தமிழ் வழி பி.இ. இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்: உயர் கல்வித் துறை அமைச்சர்
மாணவர்கள் ஆர்வம் காட்டாத காரணத்தால் வரும் கல்வியாண்டில் தமிழ் வழி பி.இ. இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். சீனா, ஜப்பான் நாடுகளைப் போல பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளை தாய் மொழியில் நன்கு புரிந்து படிக்க வசதியாக, கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக அரசு அறிவித்தபடி, 2011-ஆம் ஆண்டு முதல் தமிழ் பொறியியல் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. பொறியியல் இயந்திரவியல் பிரிவில் 719 இடங்களும், கட்டுமானப் பொறியியல்ContinueContinue reading “தமிழ் வழி பி.இ. இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்: உயர் கல்வித் துறை அமைச்சர்”
ATM கட்டணம்: SBI புதிய அறிவிப்பு
ஏ..டி.எம்., இயந்திரத்தில் வாடிக்கையாளர் மேற்கொள்ளும் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலோ அல்லது கணக்கில் பணம் இல்லையென்றாலோ, சேவை கட்டணம் பிடிக்கப்படும் என, எஸ்.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, எஸ்.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது: எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பெருநகரங்களில், ஐந்து முறை, எஸ்.பி.ஐ., வங்கி, ஏ.டி.எம்., இயந்திரத்திலும், மூன்று முறை பிற வங்கிகளிலும், இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். இது, பெரு நகரம் அல்லாத பகுதிகளில், 10 முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இலவச பரிவர்த்தனைகளை கடந்த சேவைகளுக்கு, 5 முதல், 20 ரூபாய் உடன்,ContinueContinue reading “ATM கட்டணம்: SBI புதிய அறிவிப்பு”
முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு 1.85 லட்சம் பேருக்கு அனுமதி
முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு 154 தேர்வு மையங்களில் நடக்கும் என்றும் 1.85 லட்சம் பேர் எழுத உள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது .இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை -1க்கான தேர்வு வரும் 27, 28, 29ம் தேதிகளில் நடக்கிறது. தமிழகம் முழுவதும் 154 தேர்வு மையங்களில் காலை மாலை இரு வேளைகளிலும் நடத்தப்படும் தேர்வில்ContinueContinue reading “முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு 1.85 லட்சம் பேருக்கு அனுமதி”
சென்னை, CEO,வுக்கு பதவி உயர்வு
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு, இணை இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறையின், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, ராஜேந்திரன், பள்ளி கல்வித் துறையின், இணை இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இவர், பள்ளி கல்வி இயக்குனரகத்தின், மேல்நிலைப் பள்ளி பிரிவை கவனிப்பார் என, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், பதவி உயர்வால் காலியாகும், சென்னை முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பை, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்விContinueContinue reading “சென்னை, CEO,வுக்கு பதவி உயர்வு”
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செப்.30-இல் நிறைவு: பள்ளிக் கல்வித்துறை
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 30-ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நிறுத்திக்கொள்ள வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஏப்ரலில் மாணவர் சேர்க்கை தொடங்கும். தனியார் பள்ளிகளை பொருத்தவரை, மே மாதத்துக்குள் மாணவர் சேர்க்கையை முடித்து விடுவர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடத்தப்படும். தனியார் பள்ளிகளில் சான்றிதழ் கொடுத்து வெளியேற்றப்படும் மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் தொடர்ந்துContinueContinue reading “பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செப்.30-இல் நிறைவு: பள்ளிக் கல்வித்துறை”
PG TRB PRESS NEWS: Dt – 20/09/19
CLICK HERE JOIN TELEGRAM GROUP
இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் தற்காலிக பதவி உயர்வு வழங்குதல் அரசு முதன்மை செயலர் செய்முறை
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த திரு ராஜேந்திரன் அவர்கள் மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்
FLASH NEWS 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி – அமைச்சர் புதிய அறிவிப்பு
2013 ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் சிறப்பு தேர்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் 2013 ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் சிறப்பு தேர்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தகவலைவெளியிட்டார். முன்னதாக, வரப்பாளையம் என்றContinueContinue reading “FLASH NEWS 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி – அமைச்சர் புதிய அறிவிப்பு”
PGTRB 2019 – தேர்வு மையங்கள் தூரம் தவிப்பில் தேர்வர்கள்!
அரசுப்பள்ளி முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு மையங்கள் அதிக துாரங்களில் அமைக்கப்பட்டுள்ளதால் தென்மாவட்ட தேர்வர்கள் மன உளைச்சலில் உள்ளனர். அரசுப்பள்ளிகளில் 2 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்.27 முதல் 29 வரை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தேர்வு நடத்துகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பத்தில் தேர்வு மையங்கள் குறித்து மூன்று விருப்ப இடங்கள் கேட்கப்பட்டன. முதல் தேர்வாக சொந்த மாவட்டம், அடுத்து அருகில் உள்ள மாவட்டங்களை பலர் தேர்வு செய்தனர். ஆனால்ContinueContinue reading “PGTRB 2019 – தேர்வு மையங்கள் தூரம் தவிப்பில் தேர்வர்கள்!”
CTET மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாள் 25ம் தேதி வரை சிபிஎஸ்இ நீட்டித்துள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதன்படி சிபிஎஸ்இ பள்ளிகள், நவோதயா பள்ளிகள், கேந்திர வித்யாலயா பள்ளிகளில், மத்திய திபெத்திய பள்ளிகள் பணி நியமனம் பெற சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஆசிரியர்ContinueContinue reading “CTET மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு”
2 days workshop on creating Interactive content
Click here SCERT PROC
அரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா? – The Hindu
மிகவும் நன்றி தி இந்து நாளிதழில் வெளியான நடுநிலையான செய்திக்காக!!*விளக்கமான உரை*அரசுப் பணியாளர்களில் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உரிமைகளும், ஊதியமும் அடிநிலை ஊழியர்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே, கீழடுக்குகளில் உள்ளோர் போராடும்போது, அதிகார அமைப்புகள் அனைத்தும் அவர்களுக்கு எதிராகத் தங்களின் பிரச்சாரங்களை முடுக்கிவிடுகின்றன. அதன் மூலம் அந்த வாய்ப்புகூடக் கிடைக்காத இதர பகுதி மக்களை அவர்களுக்கு எதிராகத் திருப்பிவிடுவதில் வெற்றிபெற்றுவிடுகின்றன.அரசு என்பது அமைச்சர்களும் உயர்மட்ட அதிகாரிகளும் மட்டுமல்ல; அரசின் எந்தவொரு திட்டத்தையும் அடிமட்டத்தில் செயலாக்குபவர்கள் ஊழியர்களே. கொள்கை வகுத்தலும்,ContinueContinue reading “அரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா? – The Hindu”
கனவு ஆசிரியர் விருது: ஆசிரியர்களின் விபரங்களை அக்.20 க்குள் அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
கனவு ஆசிரியர்’ விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ‘கனவு ஆசிரியர்’ விருது வழங்கப்படுகிறது. பள்ளியில் கணினியை பயன்படுத்தி பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி செயல்பாடுகளில் சிறந்த, மாணவர் சேர்க்கைக்கு உதவும் ஆசிரியர், பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என மாவட்டத்திற்கு 6 ஆசிரியர்களை தேர்வு செய்து, ‘கனவு ஆசிரியர்’ விருது மற்றும் ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. மாணவர்களின் கல்விContinueContinue reading “கனவு ஆசிரியர் விருது: ஆசிரியர்களின் விபரங்களை அக்.20 க்குள் அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு”
தீபாவளி சிறப்பு பேருந்து:விபரங்கள்
தீபாவளி சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்துத் துறை செய்திருப்பதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் இன்று (செப்.19) நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தீபாவளி பண்டிகைக் காலத்தில் மக்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்கு ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன எந்த விதமான போக்குவரத்துContinueContinue reading “தீபாவளி சிறப்பு பேருந்து:விபரங்கள்”
Departmental Examinations – May 2019 Published
Click Here RESULT DIRECT LINK
அக்டோபர் முதல் நடுநிலைப் பள்ளிகளில் மின்னணு கைரேகை பதிவு நடைமுறை
FLASH NEWS-பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்கள் மாற்றம்
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருக்கும் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குனராக மாற்றம் -பள்ளிக்கல்வித்துறை *முறைசாரா கல்வி இயக்குனர் சேதுராம வர்மா, தொடக்க கல்வித்துறை இயக்குனராக மாற்றம் *தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக மாற்றம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகளில் இனி தனியார் பள்ளி ஆசிரியர்களும்..!
மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி உள்ளிட்ட வேலைகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தமிழக அரசு அமல்படுத்தியுள்ள தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துவகை தனியார் பள்ளிகளையும் வரன்முறைபடுத்தி ஒரேவிதமான விதிமுறைகளின்கீழ் கொண்டு வருவதற்காக ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டம்’2018 ஜூலை 5-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு கடந்த செப்டம்பர் 11-ம் தேதி அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது.ContinueContinue reading “மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகளில் இனி தனியார் பள்ளி ஆசிரியர்களும்..!”
மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வுக்கான நேர்காணல் தேதி திடீரென மாற்றம்
மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்கான நேர்காணலை பல்கலைக்கழக நிர்வாகம் ஒத்தி வைத்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறும்போது, பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்காக 21 பேர் விண்ணப்பித்திருந்ததாகக் கூறியிருந்தார். அவர்களுக்கு வரும் 23ம் தேதி நேர்காணல் நடக்க இருந்தாகக் குறிப்பிட்ட அவர், 7 பேர் சிண்டிகேட் உறுப்பினர்கள் குழு முன்பாக இந்த நேர்காணல் நடத்தப்பட இருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். வெளிப்படைத் தன்மைக்காகவே நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.ContinueContinue reading “மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வுக்கான நேர்காணல் தேதி திடீரென மாற்றம்”
EMIS COMMON POOL பள்ளி அளவிலான பணிகள்!!CEO PROCEEDINGS
1.EMIS பணிக்காக நியமிக்கப்பட்ட பொறுப்பு அசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள COMMON POOL மாணவர்களின் பெயர் பட்டியலை பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும். 2.COMMON POOL இல் உள்ள மாணவனின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து EMIS இல் பதிவு செய்ய வேண்டும். 3.பதிவை செய்து முடித்த பட்டியலை , தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் CRC மைய BRTE இடம் ஒப்படைக்க வேண்டும். 4.BRTE க்கள் அதை மறு ஆய்வு செய்து வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
பணி நியமனம் பெறும் முன்பு உயர் கல்வி கற்றிருந்தால் துறை அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை..CM cell தகவல்
2019 – 2020 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு – பள்ளி மானியத்தொகை ( school grant) – மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளித்தல் – proceedings
வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் புத்தகங்கள் படிப்பதற்காக மாணவர்களுக்கு வாரம்தோறும் 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் இரா.சுடலைக் கண்ணன், அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே வாசிப்புத் திறனை மேம்படுத்த பள்ளி வளாகத்தில் நூலகப் பயன்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை மேலும் பலப்படுத்தும் வகையில், நூலகங்களில் புத்தகங்கள்படிக்க ஏதுவாக, மாணவர்களுக்கு வாரம்தோறும் 2 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும்.ContinueContinue reading “வாசிப்புக்கு இரு பாடவேளைகள் ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு”
தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்ககம்: அரசிதழில் அறிவிப்பு வெளியீடு
💥🤝தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது 💥💥தமிழகம் முழுவதும் இயங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககம் ஒன்று செயல்பட்டு வருகிறது 💥💥இந்நிலையில் தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது 💥💥ஏற்கனவே இயங்கி வந்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தை தனியார் பள்ளிகள் இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில அறிவிப்பு வெளியாகியுள்ளது 💥💥நர்சரி, பிரைமரிContinueContinue reading “தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்ககம்: அரசிதழில் அறிவிப்பு வெளியீடு“
பிளஸ் 1, பிளஸ் 2 முதலாம் பாடப்பிரிவு நீக்கம்: இன்ஜினியரிங், மருத்துவ பாடங்கள் பிரிப்பு
பிளஸ் 1, பிளஸ் 2 பாட தொகுப்பில், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் செல்வதற்கான முதலாம் பாடப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில், இரண்டுக்கும் தனித்தனியே பாடங்களை பிரித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசாணை:பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாட தொகுப்புகளில், மாற்றம் செய்யப்படுகிறது. இந்த மாற்றம், 2020 – 21ம் கல்வி ஆண்டில் அமலுக்கு வரும். மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய நிர்வாக குழுவின்ContinueContinue reading “பிளஸ் 1, பிளஸ் 2 முதலாம் பாடப்பிரிவு நீக்கம்: இன்ஜினியரிங், மருத்துவ பாடங்கள் பிரிப்பு”
5,8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு: அரசு பள்ளி ஆசிரியை விடியவிடிய உண்ணாவிரதம்
5,, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போளூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை விடிய, விடிய உண்ணாவிரதம் இருந்தார். அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி, அவர் கண்ணீர் விட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே ஜவ்வாதுமலை ஒன்றியம், அரசவெளி கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உண்டு, உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இங்கு இடைநிலை ஆசிரியையாக மகாலட்சுமி(40) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.ContinueContinue reading “5,8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு: அரசு பள்ளி ஆசிரியை விடியவிடிய உண்ணாவிரதம்”
