கள்முடிவு செய்தனர். இதையொட்டிகல்விச்சீர் வழங்கும் விழா நடந்தது. இதில் மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் மீனாவதி, தலைமை ஆசிரியர்ஆரோக்கியம் உட்பட பலர்பங்கேற்றனர்.

மாலைப்பட்டி,பூலாம்பட்டி, சால்வார்பட்டி, வெளிச்சநத்தம் உள்ளிட்ட கிராமத்தினர், 23 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் என பலர் கல்வீச்சீராக ஏராள மான பொருட்களை பள்ளிக்குகொண்டு வந்தனர்.
ஒளிப்படக்கருவி, பாதுகாப்பு ஒலிப்பான், வெள்ளை எழுது பலகைகள், பேட்டரி ஸ்பீக்கர், பீரோ, மின்விசிறி, சேர்கள் என ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஊர் வலமாக சுமந்து வந்து பள்ளிக்கு வழங்கினர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. கல்விச்சீர் வழங்கிய கிராமத்தினருக்கு ஆசிரியர் காதர் ஜெய்லானி நன்றி கூறினார்.
