பீகார் மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் தேர்வறையில் இடம் இல்லாததால், திறந்தவெளியில் அமர்ந்து தேர்வு எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Click here join TELEGRAM GROUP LINK
கல்லூரி வளாகத்தில் புல்வெளியில் மாணவர்கள் கூட்டாக அமர்ந்து தேர்வெழுதும் வீடியோ வெளியாகியுள்ளது
இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேர்வு பொறுப்பாளர், கல்லூரியில் இரண்டாயிரம் பேர் மட்டுமே அமர இடவசதி உள்ளதாகவும், ஆனால் ஐந்தாயிரம் மாணவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனாலேயே மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்
