தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு முகாம் அமைத்து தேர்வுநிலை, சிறப்புநிலை,தகுதிகாண் பருவம் முடித்தமைக்கு ஆணை வழங்குதல் – CEO

அனைத்து வகையான பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வாரம் வாரம் Time table போடும் முறை!!

*👉🏾ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை Time table update செய்யப்பட வேண்டும்*. *👉🏾ஒவ்வொரு வாரமும் புதியதாக Time table பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை அதை update செய்தாலே போதுமானது*. *Update செய்யும் முறை*👇👇👇👇 *School* | *Time table* | *Create Time table* | *Select class* | *Select section* | *Submit* | *Copy last week Time table* இதை selectசெய்தால் போதும் இந்த வாரத்திற்கு மாறிவிடும் இதுபோலContinueContinue reading “அனைத்து வகையான பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வாரம் வாரம் Time table போடும் முறை!!”

தேர்வு கட்டணம் உயர்வு ஏன்?: சிபிஎஸ்இ விளக்கம்

சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் உயர்த்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தவிர மற்ற பள்ளிகளில் இதைவிட கட்டணம் அதிகம் வசூலிப்பதாகவும் சிபிஎஸ்இ குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக, இரண்டு நாட்களாக நாடு முழுவதும் பெற்றோர் தரப்பில் சிபிஎஸ்இக்குContinueContinue reading “தேர்வு கட்டணம் உயர்வு ஏன்?: சிபிஎஸ்இ விளக்கம்”

வருகைப்பதிவு குறைந்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை

தேர்ச்சி சதவீதம் குறைய மாணவர்களின் வருகைப் பதிவு குறைவுதான் காரணம் என்பதால், மாணவர்கள் வருகைப் பதிவு குறையும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சிபிஎஸ்இ முடிவு ெசய்துள்ளது. சிபிஎஸ்இ என்னும் மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ, மாணவியரில் பெரும்பாலானவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் சிபிஎஸ்இ வாரியம் கவலை அடைந்துள்ளது. தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கையில் இறங்கியுள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்தது. பிறகுContinueContinue reading “வருகைப்பதிவு குறைந்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை”

சேர்க்கை ரத்து செய்யப்பட்ட மாணவிக்கு என்ஐடியில் உயர் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மீண்டும் சேர்க்கை: ஐகோர்ட் உத்தரவு

சேர்க்கை ரத்து செய்யப்பட்ட மாணவிக்கு என்ஐடியில் உயர்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மீண்டும் சேர்க்கை வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி, திருவரங்கத்தை சேர்ந்த சிவகாமசுந்தரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் ெசய்த மனு: திருச்சி என்ஐடியில் படிப்பதற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வில் பங்கேற்றேன் . இதில், பிடெக் பிரிவில் மெரிட்டில் தேர்வானேன். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதியினருக்கான 10% இடஒதுக்கீட்டின் கீழ் எனக்கு சேர்க்கை வழங்கப்பட்டது. சமூக நீதித்துறை அமைச்சக அறிவிப்பின்படி, கடந்த 2017-18க்கான வருமான சான்று அளித்திருந்தேன். ஆனால்,ContinueContinue reading “சேர்க்கை ரத்து செய்யப்பட்ட மாணவிக்கு என்ஐடியில் உயர் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மீண்டும் சேர்க்கை: ஐகோர்ட் உத்தரவு”

15 கி.மீ. தேசியக் கொடி: புது சாதனை முயற்சி

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் நகரில் 15 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசியக் கொடியுடன் கூடிய மனிதச் சங்கிலி சாதனை முயற்சி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது .என் தேசியக் கொடி தான் எனக்கு மிகவும் பிடித்தது என்ற கோஷத்துடன் நடத்தப்பட்ட இந்த தேசியக் கொடியுடன் கூடிய மனிதச் சங்கிலியில் 40 தன்னார்வ அமைப்புகள், பள்ளி மாணவர்கள், சிஆர்பிஎஃப் வீரர்கள், போலீஸார், உள்ளூர் மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். 15 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசியக்ContinueContinue reading “15 கி.மீ. தேசியக் கொடி: புது சாதனை முயற்சி”

பெற்றோர் ஆசிரியர் கழக சந்தா தொகை: ஆகஸ்ட் 30-க்குள் செலுத்த உத்தரவு

பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு பள்ளிகள் செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் மற்றும் சந்தா தொகையை வரும் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு 2019-20-ஆம் ஆண்டுக்குச் செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் மற்றும் செய்தி சந்தா தொகைகளை அனைத்து வகையான பள்ளிகளில் இருந்தும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள்ContinueContinue reading “பெற்றோர் ஆசிரியர் கழக சந்தா தொகை: ஆகஸ்ட் 30-க்குள் செலுத்த உத்தரவு”

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் 24 மடங்கு, பொதுப்பிரிவினருக்கு இரு மடங்கு அதிகரிப்பு

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் 50 ரூபாயிலிருந்து ரூ1,200 ஆகவும், பொதுப் பிரிவினருக்கு ரூ.750-லிருந்து ரூ.1500 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 9-ம் வகுப்பு படிக்கும்போதே பதிவு செய்ய வேண்டும், அதேபோல 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 11-ம் வகுப்பிலேயே பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் கடந்த வாரம் மாற்றம் செய்யப்பட்ட தேர்வுக்கட்டண விவரங்களை சிபிஎஸ்இContinueContinue reading “எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் 24 மடங்கு, பொதுப்பிரிவினருக்கு இரு மடங்கு அதிகரிப்பு”

தமிழ்மொழி கட்டாயத் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள்!

தமிழக அரசின் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டத்தின்படி, பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ்மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பிற மொழிகளில் படித்த ஆசிரியர்கள் பலர் பணியில் சேர்ந்துள்ளனர். இவர்கள், பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ் மொழிக்கான கட்டாயத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் பணி வழங்கப்பட்டது. ஆனால், நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள், இந்தத் தேர்வில்ContinueContinue reading “தமிழ்மொழி கட்டாயத் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள்!”

ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இல்லை:அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தற்போது ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.கோபி அருகே ஏளூரில் துணை மின் நிலையத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்* *♦💲♦இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி* *♦💲♦தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு, சிறப்பு தேர்விற்கு ஐ.ஏ.எஸ்.அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். சிறப்பு ஆசிரியர் பணிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் கவுன்சலிங் நடத்தப்படும் *♦💲♦தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும். பாலிடெக்னிக்ContinueContinue reading “ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இல்லை:அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி”

பள்ளியை மூடிவிட்டு நூலகம் அமைக்க மக்கள் எதிர்ப்பு; தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களை மீண்டும் அரசுப் பள்ளியில் சேர்க்க முடிவு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குளத்தூரில் ஒரு மாணவரே பயின்று வந்த அரசுப் பள்ளி நேற்று மூடப்பட் டதை எதிர்த்து, தனியார் பள்ளி களில் சேர்க்கப்பட்ட அனைத்து மாணவர்களையும் மீண்டும் அரசுப் பள்ளியில் சேர்த்து, பள்ளியை தொடர்ந்து செயல்படச் செய்வது என ஊர் மக்கள் முடிவெடுத்துள்ளனர். குளத்தூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வருடாபிஷேகத்தைத் தொடர்ந்து, ஊர் மக்கள் சுபிட்சமாக இருக்க முதல் முறையாக திருவிளக்கு பூஜை நடத்துவதற்காக நேற்று ஊரே விழாக்கோலம்ContinueContinue reading “பள்ளியை மூடிவிட்டு நூலகம் அமைக்க மக்கள் எதிர்ப்பு; தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களை மீண்டும் அரசுப் பள்ளியில் சேர்க்க முடிவு”

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 அரசு தொடக்கப்பள்ளிகள் நூலகமாக மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறைந்த அளவு மாணவர்களைக் கொண்ட 3 அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு, நூலகமாக மாற்றப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஏ.கொல்லப்பட்டி கிராமத்தில் கடந்த 1990-ம் ஆண்டு கிராம மக்களின் முயற்சியால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் ஏ.கொல்லப்பட்டி, சஜ்ஜலப்பள்ளி, அச்சமங்கலம், சீமானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 120 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். காலப்போக்கில் சுற்றுவட்டாரங்களில் தனியார் பள்ளிகள் அதிகரிப்பால், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்தது. கடந்தContinueContinue reading “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 அரசு தொடக்கப்பள்ளிகள் நூலகமாக மாற்றம்”

தேசிய குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் தேசிய குழந்தைகள் விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, கோவை கலெக்டர் ராஜாமணி வெளியிட்ட அறிக்கை:பால் சக்தி புரஸ்கார், பால் கல்யாண் புரஸ்கார் என்ற பெயர்களில், தேசிய குழந்தைகள் விருது வழங்கப்படுகிறது. பால் சக்தி புரஸ்கார் விருது, விளையாட்டு, கலை, வீரம், கலாசாரம், சமூக சேவை, கல்வியியல் போன்ற துறைகளில், தங்களது தனித்துவம் மிக்க செயலாற்றலால் சாதனை படைத்த குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.ContinueContinue reading “தேசிய குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு”

சிபிஎஸ்இ: 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பரில் செய்முறைத் தேர்வு

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் நடத்தப்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் நிகழ் கல்வியாண்டில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வுக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கடந்த ஆண்டில் அறிவித்தபடி தொழிற்கல்வி பிரிவினருக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மாதமும், பொதுப் பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் மாதமும் நடைபெறும்ContinueContinue reading “சிபிஎஸ்இ: 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பரில் செய்முறைத் தேர்வு”

பள்ளிகளில் நீர் பாதுகாப்பு நிகழ்ச்சிகள்

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ‘ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நீர் பாதுகாப்பு’ என்ற தலைப்பில், நிகழ்ச்சிகள் நடத்த, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின், மாநில திட்ட இயக்குனர், சுடலைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார் மாணவ – மாணவியர்,நாளொன்றுக்கு, குறைந்த பட்சம், 1 லிட்டர் தண்ணீரை சேமிப்பதை ஊக்குவிக்கும் விதமாக, நீர் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில், பள்ளிகளில் கூட்டம் நடத்துதல், சுவரொட்டி தயாரித்தல், ஓவியம், கவிதை, கட்டுரை, வினாடி – வினா, நடனம்ContinueContinue reading “பள்ளிகளில் நீர் பாதுகாப்பு நிகழ்ச்சிகள்”

நல்லாசிரியர் விருதுக்கு மதுரையில் நேர்காணல்

மதுரையில் இந்தாண்டிற்கான நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் நேர்காணல் நடந்தது .செப்.,5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இம்மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சார்பில் 51 ஆசிரியர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான நேர்காணல் முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது. சி.இ.ஓ., சுவாமிநாதன் தலைமையில் டி.இ.ஓ.,க்கள் முத்தையா, இந்திராணி, மீனாவதி, பி.இ.ஓ., ஜான் கென்னடி அலெக்சாண்டர், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் சின்னதுரை கொண்ட தேர்வு குழுContinueContinue reading “நல்லாசிரியர் விருதுக்கு மதுரையில் நேர்காணல்”

புதிய ஓய்வூதிய திட்ட வழக்கு நிலவரம்

*CPS NEWS:* 09.08.2019 புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கானது இறுதி விசாரணையை எட்டியுள்ளது. WP(MD) 3802/2012 கடந்த 5. 8. 2019 அன்று இறுதி விசாரணைக்கு வந்தது மீண்டும் விரைவில் இறுதி விசாரணைக்கு வர உள்ளது. திண்டுக்கல் எங்கெல்ஸ்.

முக்கிய அறிவிப்பு:இன்று அரசு தேர்வுகள் ரத்து!

💲🔴💲நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாளை நடக்க இருந்த அரசு பணிக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அரசின் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மழையின் தாக்கம் குறைந்த பின் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 16ம் தேதி முதல் ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு?

செப்டம்பர் 16ம் தேதி முதல் ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐகோர்ட் உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் கலந்தாய்வு செப்டம்பர் 16ல் தொடங்குவதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மே மாதம் நடைபெறுவதாக இருந்த கலந்தாய்வு செப்டம்பர் 16ல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஆசிரியர் கலந்தாய்வு EMIS இணையதளத்தில் நடைபெறும் என்றுContinueContinue reading “செப்டம்பர் 16ம் தேதி முதல் ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு?”

🅱️FLASH NEWS -ஆசிரியர் பயிற்றுநர் மாற்றி அமைக்கபட்ட பணிகள் மற்றும் இனி குறுவளமையம் மேல்நிலைப் பள்ளியினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் -இயக்குநர் செயல்முறை.

click here dowbload

அரசுப் பள்ளிகளை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

*💲🔴💲 இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கூட இல்லாமல் செயல்படும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் 46-ஐ மூடத் தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு அதிர்ச்சியளிக்கிறது.* *💲🔴மாநிலம் முழுவதும் உள்ள 46 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மூட முனைப்பு காட்டும் அரசு, அப்பள்ளிகளில் ஏன் மாணவர்கள் சேரவில்லை என்பதை ஆராயத் தவறியது வருத்தம் அளிக்கிறது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும் புதியதாகத் தொடங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாதுContinueContinue reading “அரசுப் பள்ளிகளை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.”

தேசிய திறனறிதல் தேர்வு அறிவிப்பு

கல்வி உதவி தொகைக்கான, தேசிய திறனறிதல் தேர்வு தேதியை, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்,மேல்நிலையில், பிளஸ் 2 வரையிலும், அதன்பின், பட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு வரையிலும், கல்வி உதவி தொகை பெறலாம். இதை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சிகவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி., வழங்குகிறது. இந்த கல்வி உதவி தொகை, ஒவ்வொரு மாநில மாணவர்களுக்கும், தகுதிதேர்வின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தற்போது, எட்டாம் வகுப்பு படிக்கும்ContinueContinue reading “தேசிய திறனறிதல் தேர்வு அறிவிப்பு”

தேர்வு பணியை புறக்கணிக்கும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

பொது தேர்வு பணிகளை, ஆசிரியர்கள் புறக்கணிக்க கூடாது’ என, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது சுற்றறிக்கை :தமிழக அரசு தேர்வுகள் இயக்குனரகம் சார்பாக, தேசிய திறன் அறிதல் தேர்வு, தேசிய தகுதி மற்றும் வருவாய் வழி தேர்வு, ஊரக திறன் அறிதல் தேர்வு, எட்டாம் வகுப்பு பொது தேர்வு ஆகியன நடத்தப்படுகின்றன. அதேபோல், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இந்த தேர்வுக்கான பணிகளில், அரசு மற்றும் தனியார்ContinueContinue reading “தேர்வு பணியை புறக்கணிக்கும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை”

Design a site like this with WordPress.com
Get started