ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டு பட்டப்படிப்பை மீண்டும் கொண்டுவர யுஜிசி பரிந்துரை

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரைத்துள்ளது. பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்டுவந்த நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகள் (Four Year Undergraduate Programme) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டன. அதனை மீண்டும் அறிமுகம் செய்யலாம் என பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக யுஜிசி அமைத்த நான்கு பேர் கொண்ட குழு இந்தContinueContinue reading “ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டு பட்டப்படிப்பை மீண்டும் கொண்டுவர யுஜிசி பரிந்துரை”

16ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு வரும் 16ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சீர்காழி அருகே மாதானம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

புதிய கல்விக் கொள்கை வருத்தம் அளிக்கிறது: இயக்குநர் சமுத்திரக்கனி

புதிய கல்விக் கொள்கை வருத்தம் அளிக்கிறது என்று இயக்குநர் சமுத்திரக்கனி கருத்து தெரிவித்துள்ளார். கோவையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, ”புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா சொன்னது சரிதான். ஏனெனில், கிராமப்புறங்களில் இருந்து வரும் நிறைய மாணவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர்களுக்கான விஷயத்தையும் முறையாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தலாம். எல்லோருக்கும் ஒரே கல்வியைக் கொடுத்துவிட்டு, எல்லோருக்கும் ஒரே தேர்வை வையுங்கள் என்பதைத்தான் அப்போதும் சொன்னேன்.ContinueContinue reading “புதிய கல்விக் கொள்கை வருத்தம் அளிக்கிறது: இயக்குநர் சமுத்திரக்கனி”

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை: சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவித்துள்ள முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநில, மத்திய அரசால் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல்ContinueContinue reading “மத்திய அரசின் கல்வி உதவித் தொகை: சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்”

DISTRICT LEVEL TEAM VISIT REG – SPD INSTRUCTIONS

District level Team visit will be held from august 2019 in all the schools of all blocks in our perambalur and ariyalur district. The following items are to be viewed during the district level team visit in a school 1. Students learning performance ( Reading, writing & basic arithmetic skills) in Tamil , English andContinueContinue reading “DISTRICT LEVEL TEAM VISIT REG – SPD INSTRUCTIONS”

முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க். உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக் கழகம் நடத்த உள்ளது. இளநிலை பொறியியல் படிப்புடன், தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) அல்லது பட்டதாரி நுண்ணறி (கேட்) தேர்வில் தகுதி பெற்றவர்கள் இதற்குContinueContinue reading “முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு”

தமிழகத்தில் அனைவரும் தேர்ச்சி பெறுவதால் புதிய கல்விக்கொள்கை குறித்து கவலைப்பட தேவையில்லை

தமிழகத்தில் 1 முதல் 8 வரை அனைவரும் தேர்ச்சி பெற்று வருவதால் புதிய கல்வி கொள்கை குறித்து கவலைப்பட தேவையில்லை’’ என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார் நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: மாணவர்களுக்கு லேப்டாப்பிற்கு அடுத்து டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை அரசு பள்ளியில் ஆங்கில மொழி கற்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. அந்த கட்டணத்தை ரத்து செய்ததுடன் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடக்கப்பள்ளியிலும் இன்னும் இரண்டு வாரத்தில் பயோமெட்ரிக் கொண்டுContinueContinue reading “தமிழகத்தில் அனைவரும் தேர்ச்சி பெறுவதால் புதிய கல்விக்கொள்கை குறித்து கவலைப்பட தேவையில்லை”

SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வட்டார வள மைய ஆதார் பதிவு மையம் – பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் பணி – சார்ந்து அறிவுரைகள் வழங்குதல் – சார்ந்து.!!!

பி.ஆர்க்., கவுன்சிலிங் நாளை துவக்கம்.!

பி.ஆர்க். படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நாளை துவங்குகிறது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. இதில் 83 ஆயிரத்து 396 இடங்கள் நிரம்பின. இதைத்தொடர்ந்து பி.ஆர்க். படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கை துவங்கியுள்ளது. இதில் 83 ஆயிரத்து 396 இடங்கள் நிரம்பின. இதைத்தொடர்ந்து பி.ஆர்க். படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கை துவங்கியுள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஆர்கிடெக் கல்லுாரிகளில் கவுன்சிலிங் வழியாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.ContinueContinue reading “பி.ஆர்க்., கவுன்சிலிங் நாளை துவக்கம்.!”

ஆசிரியர் பாெதுமாறுதல் கலந்தாய்வு புதிய அரசாணை விரைவில் வெளியீடு!!!

கலந்தாய்வு நடத்திட பல்வேறு குளறுபடிகளுடன் வெளியிடப்பட்ட அரசாணை நீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.* நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி புதிய அரசாணையானது விரைவில் வெளியிடப்படும். செப்.10 முதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும் மூன்றாண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற விதிமுறையானது தளர்த்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டாகியும் சிறப்பு பள்ளிகளில் கணினி ஆய்வகம் தொடங்கவில்லை: மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தவிப்பு

நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் சிறப்பு பள்ளிகளில் கணினி ஆய்வகம் தொடங்கவில்லை. இதனால், கணினி தொடர்பான கல்வியை பெற முடியாமல் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 76 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி கள் செயல்பட்டு வருகின்றன. இவற் றில், 21 அரசு சிறப்பு பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டப்பேரவையில் அறிவிக்கப் பட்டது. இதைதொடர்ந்து கணினி, மேஜை மற்றும்ContinueContinue reading “நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டாகியும் சிறப்பு பள்ளிகளில் கணினி ஆய்வகம் தொடங்கவில்லை: மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தவிப்பு”

தமிழகம் முழுவதும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 46 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் நூலகம்: அலுவலர்களுக்கு நூலகத் துறை உத்தரவு

தமிழகத்தில் குறைந்த மாணவர் களைக் கொண்ட 46 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆக.10-ம் தேதிக்குள் நூலகம் அமைக்க வேண்டும் என நூலகத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் மூலம் வேறு பள்ளி களுக்கு நியமிக்கப்பட்டு வரு கின்றனர். இதற்கிடையே, குறைந்த எண்ணிக்கை மற்றும் மாணவர் கள் இல்லாத அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு திட்ட மிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அத்தகைய பள்ளி களை மூடாமல்,ContinueContinue reading “தமிழகம் முழுவதும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 46 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் நூலகம்: அலுவலர்களுக்கு நூலகத் துறை உத்தரவு”

2 மாதங்களில் தொடக்கப்பள்ளிகளிலும் பயோமேட்ரிக் வருகைப்பதிவு முறை – அமைச்சர்

இன்னும் இரண்டு மாத காலத்தில் தொடக்கப்பள்ளிகளிலும் பயோமேட்ரிக் வருகைப் பதிவேடு முறை நடைமுறைப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்

ஆசிரியரிடம் ரூ.5 லட்சம் மோசடி ஒருவர் கைது; எஸ்.ஐ., மீது வழக்கு

தங்கக் காசுகள் வாங்கித் தருவதாக கூறி, ஆசிரியரிடம், 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டார்; எஸ்.எஸ்.ஐ., மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம், அஸ்தம்பட்டியைச் சேர்ந்தவர், உமாசங்கர், 34. இவர், ஜூன், 10ல், அப்போதைய போலீஸ் கமிஷனர் சங்கரிடம் அளித்த மனு:தனியார் பள்ளியில், ஆசிரியராக பணிபுரிகிறேன். நானும், சகோதரி ரம்யாவும், வீட்டில் டியூஷன் எடுக்கிறோம். எங்களிடம், சேலம், எஸ்.எஸ்.ஐ., ஆறுமுகம் மகன் படித்தார். ஆறுமுகத்துக்கும், எங்களுக்கும் பழக்கம் ஏற்பட்டது.மேச்சேரியைச் சேர்ந்த செந்தில்குமார்ContinueContinue reading “ஆசிரியரிடம் ரூ.5 லட்சம் மோசடி ஒருவர் கைது; எஸ்.ஐ., மீது வழக்கு”

பணிநிரந்தரம் எப்போது? 9 ஆண்டுகளாக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்!

5ஆண்டுகளில் மீதமுள்ள 16 மாதத்தில் நிறைவேற்றுமா தமிழக அரசு !. இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியது:- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பணிநியமனம் செய்த பகுதிநேர ஆசிரியர்கள் : தமிழகத்தில் 14வது சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தவுடன் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் 26.08.2011ல் அரசுப்ContinueContinue reading “பணிநிரந்தரம் எப்போது? 9 ஆண்டுகளாக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்!”

நல்லாசிரியர் விருது விதிகளில் மாற்றம்:பள்ளி கல்வி அமல்படுத்த கோரிக்கை

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, விண்ணப்பம் பெறும் போது, விதிகளில் மாற்றம் ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ல், நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. மத்திய – மாநில அரசுகளின் சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில், நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, ஆசிரியர் தேசிய விருதுக்கு, ஆன்லைனில் விண்ணப்ப பதிவு முடிந்து உள்ளது. மாநில விருதுக்கான விண்ணப்ப பதிவு குறித்து, இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில்,ContinueContinue reading “நல்லாசிரியர் விருது விதிகளில் மாற்றம்:பள்ளி கல்வி அமல்படுத்த கோரிக்கை”

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ‘சஸ்பெண்ட்

மாணவர்களிடம், பராமரிப்பு கட்டணம் வசூலித்த, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த, விண்ணமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட, மாணவ – மாணவியர் படிக்கின்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர், தேவராஜ், 50, பராமரிப்பு கட்டணம் எனக் கூறி, மாணவர்களிடம், பணம் வசூலித்துள்ளார். இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், நடராஜனிடம் புகாரளித்தனர்.விசாரணையில், தேவராஜ், முறைகேடாக, பணம் வசூலித்தது தெரிந்தது. இதையடுத்து அவர், தலைமை ஆசிரியர், தேவராஜை, ‘சஸ்பெண்ட்’ContinueContinue reading “அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ‘சஸ்பெண்ட்”

விரல் அசைவில் தமிழ் கற்கலாம்!: ஆசிரியையின் ‘வித்தை’

தமிழ் எழுத்துக்களை இப்படி கற்றுத்தர முடியுமா என, ஆச்சர்யப்பட வைக்கிறார், ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை குமுதா ராஜாமணி. கைவிரல் அசைவிலே குழந்தைகளின் மனதில் தமிழ் எழுத்துகளை பசுமரத்தாணிபோல் பதித்து வரும் இவர், நல்லாசிரியர் விருது பெற்றவரும்கூட. கொடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி, 2014ல் ஓய்வு பெற்று சென்னையில் செட்டிலாகிவிட்டார். தனது, 25 வருட கற்பித்தல் அனுபவத்தில், ஆய்வில், ‘விரல் அசைவு விளையாட்டு’ எனும் மொழிப்பயிற்சியை கண்டறிந்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு கொண்டு சேர்த்துContinueContinue reading “விரல் அசைவில் தமிழ் கற்கலாம்!: ஆசிரியையின் ‘வித்தை’”

பள்ளிக்கல்வித்துறையில் தமிழக அரசு பெருமளவு நிதியை பயன்படுத்தவில்லை என தலைமை கணக்காயர் தகவல்..!

கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான நிதியை தமிழக அரசு பயன்படுத்தவில்லை என தலைமைக் கணக்காயர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2013- 2014ம் நிதியாண்டிலிருந்து, 2017-18 நிதியாண்டு வரை தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் மொத்தம் 10 லட்சத்து 12 ஆயிரத்து 893 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் தலைமை கணக்காயர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்தContinueContinue reading “பள்ளிக்கல்வித்துறையில் தமிழக அரசு பெருமளவு நிதியை பயன்படுத்தவில்லை என தலைமை கணக்காயர் தகவல்..!”

ஏர்டெல் 3ஜி சேவை நிறுத்தம்!

நடப்பு நிதியாண்டு முதல் காலாண்டில் ரூ.2,866 கோடி இழப்பை சந்தித்துள்ள ஏர்டெல் நிறுவனம், நாடுமுழுவதும் 3ஜி சேவை நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக கொல்கத்தாவில் 3ஜி சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் 2020க்குள் நாடு முழுவதும் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதேநேரம் 2ஜி சேவை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

Design a site like this with WordPress.com
Get started