BREAKING-TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் புதிய ஆணை

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கை 2 நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2011 செம்டம்பருக்கு முன் நியமிக்கப்பட்ட 9 ஆசிரியர்கள் தகுதித் தேர்விலிருந்து விலக்கு கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் படி அனைத்து ஆசிரியர்களும் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றிருக்க வேண்டும் என்று நீதிபதி கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக த.விஜயலட்சுமி பதவியேற்பு.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் மாவட்ட கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த த.விஜயலட்சுமி அவர்கள் பதவி உயர்வு மூலம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) எஸ்.ராஜேந்திரன், அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர்( பொறுப்பு) கு.திராவிடச் செல்வம்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித் திட்டContinueContinue reading “புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக த.விஜயலட்சுமி பதவியேற்பு.”

ஆடிக்கிருத்திகையை – ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை 2 மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – Proceedings

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை ஈடுசெய்ய ஆகஸ்ட் 17-ஆம் தேதி சனிக்கிழமையை பணிநாளாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பொறியியல் பட்டதாரிகளுக்கான ‘கேட்-2020’ தேர்வு அறிவிப்பு

2020 ஆம் ஆண்டிற்கான கேட் (GATE) எனப்படும் பொறியியல் பட்டதாரிகளுக்கான நுழைவுத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2019 ஆண்டிற்கான இந்த தேர்வை சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் நடத்திய நிலையில், 2020 ஆம் ஆண்டிற்கான தேர்வை டெல்லி ஐஐடி கல்வி நிறுவனம் நடத்த உள்ளது. இதன் மூலம் தேர்வாகும் தேர்வர்கள் இந்தியாவில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் முதுநிலைப் படிப்புகளான எம்.இ / எம்.டெக் / பி.எச்.டி பட்டப்படிப்புகளில் சேரவும்அந்த மதிப்பெண் முக்கிய தகுதியாக பார்க்கப்படுகிறது. அத்துடன்ContinueContinue reading “பொறியியல் பட்டதாரிகளுக்கான ‘கேட்-2020’ தேர்வு அறிவிப்பு”

B.ED RANK LIST வெளியீடு எப்போது?

ஆக., 2ம் தேதி பிஎட். ரேங்க் லிஸ்ட் வெளியீடு பி.எட் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடப்படும் என கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. பி.எட் படிப்பில் சேர இம்மாதம் ஜூலை 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. அரசு, உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள 2040 இடங்களுக்கு இதுவரை 2500 பேர் விண்ணப்பித்துள்ளனர்

தமிழக அரசு “பொது விடுமுறை” அறிவிப்பு

வேலூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது. வேலூர் தொகுதியில் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்கள், ஆலைகள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

உபரி ஆசிரியராக உள்ளவர் ஒன்றியத்தில் மூத்தவராக இருப்பினும் அவரே ஒன்றியம் விட்டு ஒன்றிய மாறுதலுக்கு உட்படுத்தப்படுவார் என்ற விதிமுறையை எதிர்த்து வழக்கு தொடுக்கும் எண்ணம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

Go 217-ஐ (உபரி ஆசிரியராக உள்ளவர்ஒன்றியத்தில் மூத்தவராக இருப்பினும்அவரே ஒன்றியம் விட்டு ஒன்றியமாறுதலுக்கு உட்படுத்தப்படுவார் என்றவிதிமுறையை)எதிர்த்து வழக்குதொடுக்கும் எண்ணம் உள்ளவர்கள்தோழர் கலைச்செல்வன் அவர்களைத்தொடர்பு கொள்ளவும். – 9865088435

TNPL REQUIREMENT-2019 TNPL வேலைவாய்ப்பு அறிவிப்பு

பதவி: Management Trainee(Plantation) காலிபணியிடம் எண்ணிக்கை :8 விளம்பர அறிவிப்பு நாள்:18.7.2019 விண்ணப்பிக்க கடைசி நாள்:01.08.2019 இணையதள முகவரி: http://www.tnpl.com

வருமான வரித்துறை எச்சரிக்கை

🔯வருமான வரியை ஜூலை 31க்குள் கட்டாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்” என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. 🔯ஜூலை 31க்கு மேல் டிசம்பர் மாதம் இறுதி வரை வருமான வரி தாக்கல் செய்தால் 5 லட்சத்திற்குள் உள்ளோரிடம் 1000 ரூபாயும், 5 லட்சத்திற்கு மேல் வருமான முள்ளோரிடம் 5000 ரூபாயும் வசூலிக்கப்படும். 🔯டிசம்பர் 31 முதல் மார்ச் 31 வரை தாக்கல் செய்தால் ரூ.10,000 வசூலிக்கப்படும்.

ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நெல்லையில் ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சங்கர நாராயண சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு நெல்லையில் ஆகஸ்ட் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு, ‘நோட்டீஸ்’ – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

அரசு தொடக்க பள்ளிகளில் படித்து, ஆறாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, தமிழ் வாசிக்க தெரியாததால், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டம், தமிழகத்தில், 2009 முதல் அமலில் உள்ளது. இந்த சட்டத்தின் கீழ், 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, இலவச கட்டாய கல்வி வழங்கப்படும். அதனால், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, தேர்வுகள் எதுவும் இன்றி, தேர்ச்சி செய்யப்படுகின்றனர். தேர்வுகள் இல்லாததால், அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர்களுக்கு சரியாகContinueContinue reading “தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு, ‘நோட்டீஸ்’ – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு”

மாணவர் விபர குளறுபடி நடவடிக்கைக்கு உத்தரவு

மாணவர் சேர்க்கை விபரங்கள், ‘எமிஸ்’ இணையதளத்தில் முரண்பட்டிருந்தால், உரிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது மாநிலம் முழுவதும், பள்ளிகளில் படிக்கும், 1.50 கோடி மாணவர், 5.5 லட்சம் ஆசிரியர் விபரங்கள், கல்வித் தகவல் மேலாண்மை முறைமை எனும், ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளன; குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், சில பள்ளிகளில் ஆய்வு செய்ததில், ‘எமிஸ்’ இணையதளத்தில், மாணவர்ContinueContinue reading “மாணவர் விபர குளறுபடி நடவடிக்கைக்கு உத்தரவு”

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக டியூஷன் நடத்தினால் அவர்களுக்கு நல்லாசிரியர் விருது என்னும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடையாது : பள்ளிக் கல்வித்துறை

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக டியூஷன் நடத்தினால் அவர்களுக்கு நல்லாசிரியர் விருது என்னும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது, ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் சிறந்த சேவை செய்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் வெள்ளிப் பதக்கம்,ContinueContinue reading “அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக டியூஷன் நடத்தினால் அவர்களுக்கு நல்லாசிரியர் விருது என்னும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடையாது : பள்ளிக் கல்வித்துறை”

🅱REAKING NEWSஅரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்க” – உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

♦♦அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அடிக்கடி ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ♦♦தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை அடிக்கடி ஆய்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சிறப்புக் குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ♦♦இதேபோன்று தொடக்க கல்வி மாணவர்களின் எழுதுதல் மற்றும் அடிப்படை கணிதம் செய்தலை உறுதி செய்தல் வேண்டும், இதை செய்யத் தவறும் ஆசிரியர்கள் மீதுContinueContinue reading “🅱REAKING NEWSஅரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்க” – உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு”

நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை – நெறிமுறைகள் வெளியீடு

♦💲♦நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.* *♦💲♦இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், “எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் குழு அமைத்து ஆசிரியர்களை தேர்வு செய்து பரிந்துரைக்க வேண்டும்.* *SGTA-GROUP* *♦💲♦பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர்பில்லாமல் இருக்க வேண்டும். குற்றப்பின்னணி உள்ளவர்கள் பரிந்துரை செய்யப்பட்டது தெரிந்தால் அதற்கு தேர்வுக்குழுவே பொறுப்பேற்க நேரிடும். கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு பரிந்துரை செய்தல்ContinueContinue reading “நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை – நெறிமுறைகள் வெளியீடு”

பள்ளி மாணவர்களுக்கு இலவச திட்டங்கள் EMIS பதிவின் அடிப்படையில் வழங்கப்படும்: முறைகேடுகளை தடுக்க கல்வித்துறை முடிவு

♦♦மாணவர்களுக்கான இலவச திட்டங்கள் இரண்டாம் பருவத்தில் கல்வி தகவல் இணையதளம் வழியாக உள்ள விபரங்கள் அடிப்படையில் வழங்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. ♦♦தமிழகத்தில் 2019-20ம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விபரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ளீடு செய்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணியை உடனுக்குடன் முடித்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ♦♦ஆனால் பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் விபரங்களை தொகுக்கும்போது மாணவர்கள்ContinueContinue reading “பள்ளி மாணவர்களுக்கு இலவச திட்டங்கள் EMIS பதிவின் அடிப்படையில் வழங்கப்படும்: முறைகேடுகளை தடுக்க கல்வித்துறை முடிவு”

ஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு

ஒரே நேரத்தில், ஒரே பல்கலை அல்லது வெவ்வேறு பல்கலைகளில், இரண்டு பட்டப் படிப்புகளை படிக்க அனுமதிப்பது தொடர்பாக, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழு அமைத்து உள்ள சிறப்பு குழு ஆய்வு செய்கிறது. ஒரே நேரத்தில், இரண்டு ,பட்டம்,ஆய்வு செய்கிறது, யு.ஜி.சி., குழு ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்கள் படிப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக, யு.ஜி.சி., சார்பில், 2012ல், ஒரு குழு அமைக்கப்பட்டது. ஐதராபாத் பல்கலை துணை வேந்தராக இருந்த, பர்ஹான் குமர் தலைமையிலான அந்த குழு,ContinueContinue reading “ஒரே நேரத்தில் இரண்டு பட்டம் ஆய்வு செய்கிறது யு.ஜி.சி., குழு”

நீட் 2019 – அரசுப் பள்ளியில் படித்த ஒரு மாணவருக்கு கூட, அரசு கல்லூரியில் இடமில்லை – அதிர்ச்சி தகவல் !

நீட் தேர்வுக்காக தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பயிற்சி மையங்களில் படித்தவர்களில், ஒரு மாணவருக்கு கூட இந்தாண்டு மருத்துவ படிப்பில் சேருவதற்கு இடம் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட்தேர்வுக்கு பயிற்சி மையங்கள் நடத்தப்படுகின்றன. இதற்காக பள்ளிக்கல்வித்துறை, ஸ்பீட் மெடிக்கல் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனத்துடன் இணைந்து 412 பயிற்சி மையங்கள் அமைத்து பயிற்சிContinueContinue reading “நீட் 2019 – அரசுப் பள்ளியில் படித்த ஒரு மாணவருக்கு கூட, அரசு கல்லூரியில் இடமில்லை – அதிர்ச்சி தகவல் !”

78 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளை மூட (ஏஐசிடிஇ) அனுமதி

தமிழகத்தில் 4 பொறியியல் கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் முதல் கட்டமாக 78 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அனுமதி அளித்துள்ளது. 2019-20-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியைப் பெற தமிழகத்திலிருந்து ஏற்கெனவே 18 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்காத நிலையில், மேலும் 4 கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்க்கையை இந்த ஆண்டு முதல் நிறுத்திக்கொள்ள ஏஐசிடிஇ அனுமதி அளித்திருக்கிறது. இதன் மூலம் நிகழாண்டில் 22 பொறியியல் கல்லூரிகள் சேர்க்கையை நிறுத்தியுள்ளன.ContinueContinue reading “78 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளை மூட (ஏஐசிடிஇ) அனுமதி”

சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம்?

மத்திய பள்ளிக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முறையிலும் மாற்றங்களை கொண்டு வர சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. வரும் கல்வி ஆண்டில் இந்த புதிய தேர்வு முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு முறை வரப்போகிறது. மேலும், 12ம் வகுப்பு தேர்வில் இடம் பெறும் கேள்வித்தாள் வடிவமைப்பும் மாறுகிறது. அதில் கொள்குறி வினாக்கள்(Objective Type) அதிகம் இடம் பெற உள்ளன. அதற்காக பாடங்களை நன்று ஊன்றிப்ContinueContinue reading “சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம்?”

ஆசிரியர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

💲💠💲💠பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்ந்து,* *இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ் படிக்காதவர்கள் மீது, ‘சஸ்பெண்ட்’ உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.* *💲💠தமிழக அரசின் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டத்தின்படி, பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.* *SGTA-GROUP* *💲💠💲இந்நிலையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், பிற மொழிகளில் படித்த ஆசிரியர்கள் பலர், பணியில் சேர்ந்துள்ளனர்.* *💲💠💲இவர்கள், பணியில் சேர்ந்த, இரண்டுContinueContinue reading “ஆசிரியர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு”

Design a site like this with WordPress.com
Get started