காலாண்டு தேர்வு வினாத்தாள் அடிப்படையில், பொது தேர்வு வினாத்தாள் அமையும்

காலாண்டு தேர்வு வினாத்தாள் அடிப்படையில், பொது தேர்வு வினாத்தாள் அமையும்’ என, தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளில், வினாத்தாள் எப்படி இருக்கும் என, தேர்வு துறை சுற்றறிக்கை அனுப்பும். ஆனால், இந்த ஆண்டு, வினாத்தாள் எப்படி இருக்கும் என, இதுவரை அறிவிக்கவில்லை.இந்நிலையில், வினாத்தாள் முறை குறித்து, தேர்வு துறை வட்டாரத்தில் விசாரித்த போது, ‘காலாண்டு தேர்வு வினாத்தாள் அடிப்படையிலேயே,ContinueContinue reading “காலாண்டு தேர்வு வினாத்தாள் அடிப்படையில், பொது தேர்வு வினாத்தாள் அமையும்”

மாணவர்களின் ரிப்போர்ட் கார்டுகள் இனி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்

தமிழகப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ரிப்போர்ட் கார்டுகள் இனிமேல் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அட்டையில் மாணவரின் மதிப்பெண்கள், வருகைப் பதிவேடு, போன்றவை பெற்றோர் கவனத்திற்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இதற்காக பெரும் குவியலாக அட்டைகள் தேவைப்படுகின்றன. இந்நிலையை மாற்ற பெற்றோரின் இமெயிலுக்கு நேரடியாக பதிவு அட்டை விவரத்தை அனுப்பிவைக்கப்படுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் பள்ளிகளிலேயே அதனை தரவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதியும் செய்யப்பட உள்ளது. இந்த சேவையை வழங்கக் கூடிய நிறுவனங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுContinueContinue reading “மாணவர்களின் ரிப்போர்ட் கார்டுகள் இனி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்”

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் அவகாசம்

:கடந்த, 2018 – 19ம் நிதியாண்டுக்கு, அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய் வருவாய் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். கட்டாயம்வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமான வரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது, ஓராண்டுக்கு முன் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதன்படி, 2018 – 19க்கான,ContinueContinue reading “வருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் அவகாசம்”

கற்றல் கற்பித்தலில் இடர்பாடுகள் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் மேலும் வகுப்பறை நிகழ்வுகளில் ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE’S) மாதிரி வகுப்புகள் எடுக்க வேண்டும் – RTI

ஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்

ஆசிரியர் தகுதி தேர்வில், இரண்டாம் தாளுக்கான, மதிப்பெண் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியர்கள் பணியில் சேர, ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு, ஜூன், 8, 9ம் தேதிகளில் நடந்தது. இதற்கான முடிவுகள், ஆகஸ்ட், 20ல் வெளியிடப்பட்டன. முதல் தாளை, 1.62 லட்சம் பேர் எழுதியதில், 0.33 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம்ContinueContinue reading “ஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்”

தற்போதைய நிலவரப்படி பணிநிரவல்: தொடக்க கல்வி துறையில் நடவடிக்கை

தொடக்க கல்வித்துறை பள்ளிகளில், தற்போதைய நிலவரப்படி, உபரி ஆசிரியர் பணியிடங்களை, பணிநிரவல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், 2018, ஆக., 1 நிலவரப்படி, மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கேற்ப, உபரி மற்றும் பற்றாக்குறை ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டன. அதற்கான பணிநிரவல், கடந்த மாதம் நடக்கவிருந்த நிலையில், வேலூர் தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, பணிநிரவல் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில், மீண்டும் தற்போதைய நிலவரப்படி, கூடுதல் பணியிடங்கள் தேவைப்படும் பள்ளிகள், ஆசிரியர் பணியிடம்ContinueContinue reading “தற்போதைய நிலவரப்படி பணிநிரவல்: தொடக்க கல்வி துறையில் நடவடிக்கை”

கல்வித் தொலைக்காட்சி துவக்க விழா தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

*கல்வித் தொலைக்காட்சி துவக்க விழா 26/08/2019 திங்கட்கிழமை* மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்வித் தொலைக்காட்சி துவக்க விழா நிகழ்ச்சிகளை காணும் பொருட்டு அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பு

TNTET 2019 Result – 1,500 ஆசிரியர்களின் வேலைக்கு சிக்கல்

ஆசிரியர் தகுதி தேர்வில், 1 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்ற நிலையில், அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும், 1,500 ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, தமிழகத்தில், 2011ல், ‘டெட்’ என்ற ஆசிரியர் தகுதிதேர்வு முறை அறிமுகமானது. டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற, ஐந்தாண்டு அவகாசம் அளிக்கப்பட்டது.பின், இந்த அவகாசம் ஒவ்வொரு ஆண்டும்,ContinueContinue reading “TNTET 2019 Result – 1,500 ஆசிரியர்களின் வேலைக்கு சிக்கல்”

இடைநிலை ஆசிரியர்களுக்கான Surplus கலந்தாய்வு தேதி அறிவிப்பு

பள்ளிக் கல்வி – தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 01.06.2018 நிலவரப்படி ஆசிரியர் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரிப் பணியிடங்களில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை நிரப்பதகுந்த காலிப்பணியிடம் / கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு 30.08.2019 பணிநிரவல் நடத்த தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்து வந்த பாதை…

தலைமையாசிரியராக பணியேற்ற நாள் முதல் இன்று வரை. பள்ளிக்கு முதலில் சென்று கடைசியில் வந்தோம். நலத்திட்டங்களுக்காக நாள்தோறும் சாக்கு தூக்கினோம். மூன்று பருவமும் மூட்டைத்தூக்கும் முதலாளியாய் வலம் வந்தோம். எமிஸ் ஆதாருக்காக எத்தனையோ இரவுகள் விழித்திருந்தோம். கட்டிட வசதிக்காக கைக்காசை செலவு செய்தோம் கண்மூடி கழிப்பறை சுத்தம் செய்தோம். ஆண்டுவிழாகொண்டாட ஆயிரத்தெட்டு பிரச்சினைகளை சந்தித்தோம். smc கூட்டம் போட எத்தனையோ கஷ்டங்கள். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விழா. ஓய்வில்லாமல் போட்டிகள். சத்துணவு மேற்பார்வை சக ஆசிரியர் மேற்பார்வைContinueContinue reading “தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் கடந்து வந்த பாதை…”

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த கால கட்டத்தில் 29.1.19 க்கு பின்னர் பணியில் சேர்ந்த மற்றும் பணியில் சேராத ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிட உரிய அறிவுரைகள் சார்ந்த CEO செயல்முறைகள்

பள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை சார்ந்த உளவியல் பாடங்களை சேர்க்க பரிந்துரை – சென்னை பல்கலைக்கழகம்

பள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை சார்ந்த உளவியல் பாடங்களை சேர்க்க அரசுக்கு பரிந்துரை செய்ய இருப்பதாக சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சார்பில் பேரிடர் காலங்களில் பள்ளி மாணவர்களின் பங்கு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புவியியல் துறை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பேரிடர் காலங்களில் மாணவர்கள் உளவியல் ரீதியாக அதிக பாதிப்பு அடைவதாகவும், அதிலிருந்து மீள நீண்ட காலம் எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். இதனை கருத்தில் கொண்டு பள்ளி பாடத்திட்டத்தில்ContinueContinue reading “பள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை சார்ந்த உளவியல் பாடங்களை சேர்க்க பரிந்துரை – சென்னை பல்கலைக்கழகம்”

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வேதனை அளிக்கிறது

ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய லட்சக்கணக்கான ஆசிரியர்களில் சில நூறு பேர் மட்டுமே தேர்ச்சிப்பெற்றுள்ளனர் என்றும், இது வேதனையளிப்பதாகவும் கூறினார். மேலும் இதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், கல்வித்தரத்தையும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் தரத்தையும மேம்படுத்துவது அரசின் கடமைContinueContinue reading “ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வேதனை அளிக்கிறது”

ஆசிரியர்களிடமும் அரசு ஊழியர்களிடமும் பிடித்தம் செய்யப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கீழ் அரசு செலுத்தும் வட்டிக்கான வட்டி விகிதம் 7.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை

2019 – 2020-ம் ஆண்டுக்கான (NEET) மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு: தேசிய தேர்வு முகாமை அறிவிப்பு

2019- 2020-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு 2020 மே 3-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது. மே 3-ல் நடைபெறும் நீட் தேர்வு முடிவுகள் 2020 ஜூன் 4-ல் வெளியிடப்படும். 2019 – 2020-ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகாமை வெளியிட்டு உள்ளது

கல்வி அலுவலர்களுக்கான 3 நாள் மேலாண்மை நிர்வாகப் பயிற்சி முகாம் தொடங்கியது.

பள்ளி மாணவர்களின் கணிதத் திறமையை வளர்க்கும் விதமாக பல்வேறு முயற்சிகளை கல்வித்துறை மேற்கொண்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மாமல்லபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான 3 நாள் மேலாண்மை நிர்வாகப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, முகாமைத் தொடங்கி வைத்தனர். மாமல்லபுரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ்ContinueContinue reading “கல்வி அலுவலர்களுக்கான 3 நாள் மேலாண்மை நிர்வாகப் பயிற்சி முகாம் தொடங்கியது.”

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையில் 2019 – 2020ஆம் கல்வி ஆண்டில் ஏற்பட்டுள்ள நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பும் பொருட்டு 01.01.2019 -னை மைய நாளாக கொண்டு தகுதி வாய்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் விவரம் பெறப்பட்டு உயர்நீதிமன்ற வழக்கு எண். W.p.no. 16570 and 22145 of 2014 , நாள் 22/12/2017-ல் பெறப்பட்ட இடைக்கால தீப்பின்படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு தெரிவுப் பட்டியல் வெளியீடு. CLICK HERE TO SGTContinueContinue reading “நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.”

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதல்வர் பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு

அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான தொடர்ச்சியான நடவடிக்கையை கைவிட வேண்டும் என, ஜாக்டோ ஜியோ அமைப்பினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர். ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று (ஆக.21) நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அம்மனுவில், “பொதுமக்கள், மாணவர் நலன் கருதியும் அரசுப் பணிகள் முடங்குவதால் அரசுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டும் வேலைநிறுத்தத்தை கடந்த 30-01-2019 அன்றே கைவிட்டு பணியேற்கச் சென்ற நிலையில், ஆசிரியர்கள், அரசுContinueContinue reading “ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதல்வர் பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு”

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு :தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள் நவ. 3ல் நடக்கவுள்ள மாநில அளவிலான முதல் கட்ட தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்கலாம்.இதற்கான விண்ணப்பங்களை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் செப். 7 வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் 50 ரூபாயைContinueContinue reading “தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்”

பங்களிப்பு ஓய்வூதியம் வட்டி விகிதம் குறைப்பு

தமிழகத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களிடம், பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, ஏப்., 1 முதல், ஜூன், 30 வரை, 8 சதவீதம், வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது, ஜூலை, 1 முதல், செப்., 30 வரையிலான காலத்திற்கு, 7.9 சதவீதம், வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே இருந்ததை விட, 0.1 சதவீதம் வட்டி குறைவு. இதற்கான உத்தரவை, நிதித்துறை செயலர், கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்

தொடக்கப் பள்ளிகளில், குறிப்பிட்ட பாடத்துக்கு ஆசிரியர்கள் இல்லாதபோது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களை அனுப்பி, பாடம் நடத்தலாம்  

மேல்நிலை பள்ளிகளின் ஆய்வகம், நுாலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும், தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தலாம்’ என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வளாகங்களில் செயல்படும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், மேல்நிலைப் பள்ளியின் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. மேலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறை, விளையாட்டு மைதானம், ஆய்வகம் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை .தொடக்கப் பள்ளிகளில், மூத்த ஆசிரியர்கள், அனுபவ அடிப்படையில், தலைமை ஆசிரியர் பொறுப்பில்ContinueContinue reading “தொடக்கப் பள்ளிகளில், குறிப்பிட்ட பாடத்துக்கு ஆசிரியர்கள் இல்லாதபோது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களை அனுப்பி, பாடம் நடத்தலாம்  “

Design a site like this with WordPress.com
Get started