உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கும் சிறப்பாசிரியர் பணி வழங்க அரசு பரிசீலிக்கலாம்: நீதிமன்றம் உத்தரவு

உடற்கல்வி சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு படித்தவர்கள் உடற்கல்வி சிறப்பாசிரியர்களாக தகுதியானவர்களாகக் கருதி, ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டவர்களுடன் இணைந்து இவர்களுக்கும் பணி வழங்க பரிசீலிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தமிழகத்தில் உள்ள சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 2017-இல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து 2017 செப்டம்பரில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 632 பேரின் பெயர் பட்டியல் வெளியானது. இந்த தேர்வில் பலருக்குContinueContinue reading “உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கும் சிறப்பாசிரியர் பணி வழங்க அரசு பரிசீலிக்கலாம்: நீதிமன்றம் உத்தரவு”

1½ லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு: 10 நாட்களுக்குள் கலந்தாய்வு அமைச்சர் தகவல்

ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதிய ஆசிரியர் தகுதி முதல் தாள் தேர்வு முடிவு நேற்று வெளியானது. இன்னும் 10 நாட்களுக்குள் கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் கற்றுக்கொடுக்கும் தகுதியிலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.)ContinueContinue reading “1½ லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு: 10 நாட்களுக்குள் கலந்தாய்வு அமைச்சர் தகவல்”

ஆயிரத்து 316 பள்ளிகளில் ‘பயோ-மெட்ரிக்

திண்டுக்கல்லில் உள்ள ஆயிரத்து 316 அரசு பள்ளிகளுக்கு பயோ- மெட்ரிக் வருகை பதிவு கருவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்ய ‘பயோ-மெட்ரிக்’ வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு பள்ளிகளுக்கு பயோ-மெட்ரிக் கருவி வழங்கப்பட்டுள்ளது. அதில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் தங்கள் வருகையை பயோ-மெட்ரிக் கருவியில் கட்டாயம் பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக திண்டுக்கல்லில் உள்ளContinueContinue reading “ஆயிரத்து 316 பள்ளிகளில் ‘பயோ-மெட்ரிக்”

பிஎச்.டி. சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம்: விரைவில் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை

பிஎச்.டி., எம்.ஃபில். போன்ற ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை, நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நடத்துவது விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது. அதுவும், நுழைவுத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பிஎச்.டி. சேர்க்கைக்கு தகுதி பெறுவர். தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற சில பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே, பிஎச்.டி. மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்றபோதும், பல பல்கலைக்கழகங்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றுவதில்லை. இந்தச் சூழலில் நாட்டில்ContinueContinue reading “பிஎச்.டி. சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம்: விரைவில் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை”

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு: இன்று மறுகூட்டல் முடிவுகள்

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளன. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வெழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 771 ஆகும். இதில் மறுகூட்டலுக்கு 920 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதைத் தொடர்ந்து மறு கூட்டல் செய்யப்பட்ட விடைத்தாள்களின் எண்ணிக்கை 1,898 ஆகும். மதிப்பெண் மாற்றம்ContinueContinue reading “பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு: இன்று மறுகூட்டல் முடிவுகள்”

பாட திட்டம் விரைவில் மாற்றம்

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சிலான, ஐ.சி.எஸ்.இ.,யின் பாட திட்டம் விரைவில் மாற்றப்பட உள்ளது. இந்தியாவில், அனைத்து மாநிலங்களின் பாட திட்டங்களும், தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன சி.பி.எஸ்.இ., பாட திட்டமும், தேசிய கல்வி கொள்கையின் கீழ், தேசிய கல்வியியல் கவுன்சிலால் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் என்ற, ஐ.சி.எஸ்.இ., பாட திட்டம், தேசிய கல்வி கொள்கையின் கீழ் வராமல், தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றின் தேர்வுகளும், மாணவர்கள் சேர்க்கையும், தனியாக நடத்தப்படுகின்றன .இந்தContinueContinue reading “பாட திட்டம் விரைவில் மாற்றம்”

9,பிளஸ் 1 வகுப்புகளுக்கு வேறு பாடங்கள் நடத்த கூடாது: பள்ளிகளுக்கு எச்சரிக்கை

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடங்களை மட்டுமே பள்ளிகள் நடத்த வேண்டும். அதைவிட்டு வேறு பாடங்களை நடத்தினால் அந்த மாணவர்கள் அடுத்த தேர்வை எழுத அனுமதி கிடைக்காது என்று சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாகவே அதற்குரிய பாடங்களை நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக 9ம் வகுப்பில் படிக்கும்ContinueContinue reading “9,பிளஸ் 1 வகுப்புகளுக்கு வேறு பாடங்கள் நடத்த கூடாது: பள்ளிகளுக்கு எச்சரிக்கை”

காமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை பட்டப்படிப்புகளில் தமிழ் உள்ளிட்ட பல பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மதுரையில் நேற்று காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பின் செயலாளர் பேராசிரியர் முரளி கூறியதாவது: மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை தமிழ், காந்திய சிந்தனை, உளவியல், தத்துவம் மற்றும் சமயம், மனித உரிமை கல்வி, மகளிரியல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட முதுகலை பட்டப்படிப்புகள் இருந்தன. இந்த முதுகலை பட்டப்படிப்புகள் நடப்பாண்டு முதல்ContinueContinue reading “காமராஜர் பல்கலை. தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை படிப்புகளில் தமிழ் பாடப்பிரிவு நீக்கம்”

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் செப்.23ல் பிரசார பயணம்

அரசு பள்ளிகளை மூடக்கூடாது தமிழ்வழி கிராமப்புற கல்வியை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் செப்.23 முதல் ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். இது குறித்து கூட்டணி நிர்வாகி முத்துமுருகன் கூறியதாவது:அரசுப்பள்ளிகளை மூடுவதை அரசு கை விடவேண்டும். மூடிய பள்ளிகளை திறக்க வேண்டும். தமிழ் வழிக்கல்வியை பாதுகாக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.23ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளிContinueContinue reading “ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் செப்.23ல் பிரசார பயணம்”

உள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு

உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுச்சாவடி அலவலர்களாகப் பணிபுரிய, ஆசிரியர்கள் பெயர் பட்டியலை அனுப்பும்படி, பள்ளிகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், 2016ல் இருந்து நடத்தப்படாமல் உள்ளது. வார்டு மறுவரையறை செய்வதில், தாமதம் ஏற்பட்டதாக, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில், வழக்கு நிலுவையில் உள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் துவக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்துவதற்கான, முன்னேற்பாடு பணிகள், கீழ் நிலைகளில் நடந்து வருகின்றன.’ ஓட்டுச்சாவடி அலுவலர்களை நியமிப்பதற்காக, ஆசிரியர்களின்ContinueContinue reading “உள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு”

80 சதவீதத்திற்கு மேல் வருகைப்பதிவு இருந்தால் பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக இவ்வளவு மதிப்பெண்கள் வழங்கலாம்: அதிரடி உத்தரவு

பள்ளி மாணவ, மாணவிகள் 80 சதவீதத்திற்கு மேல் வருகைப்பதிவு இருந்தால் அவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்கள் வழங்கலாம் என்று முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்கள் வருகை பதிவிற்கு அதிகபட்சமாக 2 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். 80 சதவீதத்திற்கு மேல் வருகை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு 2 மதிப்பெண்களும், 75 சதவீதம் முதல் 80 சதவீதம்ContinueContinue reading “80 சதவீதத்திற்கு மேல் வருகைப்பதிவு இருந்தால் பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக இவ்வளவு மதிப்பெண்கள் வழங்கலாம்: அதிரடி உத்தரவு”

Design a site like this with WordPress.com
Get started