தனியார் பள்ளியில் 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தாளாளர் வீட்டில் 2-வது நாளாக வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

போதுப்பட்டி போஸ்டல் காலனியில் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் அதன் கீழ் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளிடம் அரசு நிர்ணயம் செய்ததை விட அதிகமாக ஆண்டுக்கு மூன்று லட்சத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் நீண்ட கால நீட் பயிற்சிக்கு ஒன்றே முக்கால் லட்சம் வரை கட்டணம் பெறப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை மற்றும் கோவையை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் பள்ளி, நீட் பயிற்சி மையம், பள்ளியின் தாளாளர் சரவணன் மற்றும் இயக்குனர்கள் வீடுகளில் நேற்று சோதனையில் ஈடுப்பட்டனர்.

இரவு 10 மணி வரை சுமார் 14 மணி நேரம் சோதனை நடந்தப்பட்ட நிலையில் இன்று காலை 7 மணியில் இருந்து அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Design a site like this with WordPress.com
Get started