1000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடிகள் செய்த 1000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 17பி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடந்தது. 70 ஆயிரம் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஏப்ரல் மாத இறுதிவரை விடைத்தாள்களை திருத்தி முடித்தனர். மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. சில மாணவர்களுக்கு எதிர்பார்த்த அளவு மதிப்பெண் கிடைக்கவில்லை. இதனால் 5000 மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்குContinue reading "1000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்"

ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடாவிடில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்: ஜாக்டோ – ஜியோ

5,400 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடாவிடில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ - ஜியோ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதன்மை கல்வி அலுவலர்கள் வீடு முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் திருத்துறைபூண்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் கோகிலா தங்கசாமி அவர்களும், சென்னை தொழில்நுட்ப கல்வி ஆராய்ச்சி நிறுவன தலைவர் முனைவர். சிந்தை.செயராமன் அவர்களும் பயிற்றுநராக கலந்துகொண்டு குழந்தைகள் மனம் மகிழும் வகையில் தமிழ் கற்பித்தல் மற்றும் பாடங்களை இணைத்துக் கற்பிக்கும் முறைகள் என்னும் தலைப்பில் கலந்துரையாட உள்ள ஆசிரியர்களுக்கான அசத்தல் கருத்தரங்கில் பங்கேற்றுப் பயனடைய அழைக்கின்றோம்.. அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ,படித்துக்கொண்டிருக்கும் ஆசிரியப் பயிற்சி மாணவர்கள் என அனைவருக்குமான கருத்தரங்கம். இடம்Continue reading "ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம்"

EMIS New Update

EMIS Staff details - Teachers profileலில் *தற்போது ஒவ்வொரு ஆசிரியருக்கும் Main Subjects Taught பகுதியில் 6பாடங்களை பதிவிடும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றுக்கு மேற்பட்ட பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு TIME TABLE உருவாக்குவதில் இருந்த இடர்பாடுகள் களையப்பட்டுள்ளது. மேலும் மாற்றுப்பணியில் (deputation) உள்ள ஆசிரியர்களுக்கும் தற்போது TIME TABLE உருவாக்க முடியும்.

TRB உதவிப் பேராசிரியர் தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வழக்கு!

'உதவிப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பை, ரத்து செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ரமேஷ் தாக்கல் செய்த மனு:எம்.எஸ்சி., - எம்.பில்., மற்றும், பி.எட்., முடித்துள்ளேன். உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளேன். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2,340 உதவி பேராசிரியர்கள் நேரடி தேர்வு நியமனத்திற்கு விண்ணப்பிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம், ஆக., 28ல் அறிவிப்பு வெளியிட்டது. மொத்தம், 34 மதிப்பெண்ணில்,Continue reading "TRB உதவிப் பேராசிரியர் தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வழக்கு!"

காலாண்டு தேர்வு நாளை துவக்கம்

பத்து முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வு, நாளை துவங்க உள்ளது. தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, பருவ தேர்வுகளும், 10 முதல் பிளஸ் 2 வரை, மூன்று நிலைகளில் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான, முதல் பருவ தேர்வு, தனியார் பள்ளிகளில், நேற்று முன்தினம் துவங்கியது. அரசு பள்ளிகளில், வரும்,Continue reading "காலாண்டு தேர்வு நாளை துவக்கம்"

நேற்று மாலை அதிரடி உத்தரவு – தமிழகத்தில் 10 மாணவர்கள் உள்ள பள்ளி ஆசிரியர்கள் வேறு இடத்திற்கு மாற்றம்: பள்ளிகல்வித்துறை

தமிழகம் முழுவதும் 10 மாணவர்கள், அதற்குகீழான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்து, அங்கு உடனடியாக பணியில் ஈடுபட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது ஆசிரியர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 38 ஆயிரம் அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டம், ஒன்றிய அளவில் பிரிக்கப்பட்டு அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 3 கி.மீ ஒரு பள்ளி என்கிற அளவுக்கு, தமிழகத்தில் பள்ளிகள்Continue reading "நேற்று மாலை அதிரடி உத்தரவு – தமிழகத்தில் 10 மாணவர்கள் உள்ள பள்ளி ஆசிரியர்கள் வேறு இடத்திற்கு மாற்றம்: பள்ளிகல்வித்துறை"

கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய குழு அமைத்தது பள்ளிக்கல்வித்துறை

2018-19ஆம் ஆண்டுக்கான கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை குழு அமைத்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்திற்கு 6 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டு

SPD PROCEEDINGS – தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு – ஒருங்கிணைந்த பணியிடைப் பயிற்சி – NISHTHA – மாநில அளவிலான பயிற்சிக்கு பங்கேற்பாளர்கள் விடுவித்தல் – தொடர்பாக

🅱️breaking News:_நாளை முதல் அக். 1-ம் தேதி வரை பிளாஸ்டிக் விழிப்புணர்வு-பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு

நாளை முதல் அக். 1-ம் தேதி வரை பிளாஸ்டிக் விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு

தொகுப்பூதியத்தில் 2003 பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமை மற்றும் பணப்பலன் வழக்கு தொடுத்த ஆசிரியர்களுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

2003 - 04 Regularization - High Court Judgement Order - Download O R D E R This Writ Petition has been filed for a direction to the first respondent herein to regularize the services of the petitioners from their initial dates of appointments till 01.06.2006 with all consequential monetary and service benefits. 2. It isContinue reading "தொகுப்பூதியத்தில் 2003 பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமை மற்றும் பணப்பலன் வழக்கு தொடுத்த ஆசிரியர்களுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு."

ஆசிரியர் தகுதி தேர்வில் ருசிகரம்… – தேர்வர்கள் மூலம், தேர்வு வாரியத்துக்கு ரூ. 20 கோடி வருவாய்

986 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், தேர்வு வாரியம் 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. * 986 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், தேர்வு வாரியம் 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. * அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5 லட்சத்து 42 ஆயிரத்து 51 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். * தேர்வு எழுதியவர்களில்,1 புள்ளி 16 சதவிகிதம் பேர் மட்டும்,Continue reading "ஆசிரியர் தகுதி தேர்வில் ருசிகரம்… – தேர்வர்கள் மூலம், தேர்வு வாரியத்துக்கு ரூ. 20 கோடி வருவாய்"

குறுவட்ட போட்டியில் கலக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள் – ஒரே பள்ளியை சேர்ந்த 123 பேர் வெற்றி

மாவட்ட அளவில் நடைபெற்ற குறுவட்ட போட்டியில் திருமங்கலம் அரசுப் பள்ளி மாணவிகள் 123 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் நடைபெற்ற குறுவட்ட போட்டியில் திருமங்கலம் அரசுப் பள்ளி மாணவிகள் 123 பேர் வெற்றி பெற்றுள்ளனர். டீ கல்லுப்பட்டி தனியார் பள்ளியில், உசிலம்பட்டி கல்வி மாவட்ட குறுவட்ட போட்டி நடைபெற்றது இதில் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர் கபடி வாலிபால் எறிபந்து இறகுப்பந்து வளையப்பந்து தடகளம் உள்ளிட்டContinue reading "குறுவட்ட போட்டியில் கலக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள் – ஒரே பள்ளியை சேர்ந்த 123 பேர் வெற்றி"

230 தையல் ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியீடு

அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை மற்றும் உடற்கல்வி ஆகிய நான்கு பிரிவுகளில் 1300 சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்ய கடந்த 2017 ஆம் ஆண்டு போட்டி தேர்வு நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் 81 இசை ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், 230 தையல் ஆசிரியர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. http://www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில், ஒரு பணியிடத்திற்குContinue reading "230 தையல் ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியீடு"

பணிப்பதிவேட்டில் தவறு கண்டறிந்தால் அதை திருத்தும் அதிகாரம் தற்போதைய HM க்கு உண்டா? – CM CELL REPLY

ஒரு தொழிற்கல்வி ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு உரிய ஈட்டிய விடுப்பு ( EL - 177 நாட்கள்) பதிவு செய்யாமல் விடுபட்டு உள்ளது. அது தற்போது ஓய்வுபெற்ற பின்னர் கண்டறியப்பட்டது.அதை சரிசெய்யும் பொருட்டு அந்த சம்மந்தப்பட்ட ஆசிரியர் பணிபுரிந்த பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர் விடுபட்ட பதிவினை பதிவு செய்து பணப்பலன்களைப் பெற்றுத் தர அதிகாரம் உள்ளதா? இல்லை எனில் இந்த சிக்கல் தீர்வு காணும் விதமாக எந்த அதிகாரியை அணுக வேண்டும்? CM CELLContinue reading "பணிப்பதிவேட்டில் தவறு கண்டறிந்தால் அதை திருத்தும் அதிகாரம் தற்போதைய HM க்கு உண்டா? – CM CELL REPLY"

NET தேர்வு தேதி அறிவிப்பு

தேசிய அளவில் உதவி பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான NET தேர்வு டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பல்கலை., மானியக்குழு அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு http://www.nta.ac.in, ntanet.nic.in, ugcnet.nta.nic.in போன்ற இணையளங்களில் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

இந்திய இராணுவ பொதுப் பள்ளிகள் என்பது இந்திய இராணுவ அதிகாரிகளின் குழந்தைகளின் கல்விக்கான ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பாகும். இது இந்தியாவின் மிகப் பெரிய தொடர் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். இராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு இதனை செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.Continue reading "8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு"

முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் இணை துறை அலுவலர்கள்- ஒன்றியத்தில் பள்ளி பார்வை–மீளாய்வு கூட்டம் நடைபெறுதல் – சார்ந்து!! – பார்வை அலுவலர்கள் விவரம்!!

பள்ளிகள் விண்ணப்பிக்காததால் 7,000 மாணவர்கள் உதவித் தொகை பெறுவதில் சிக்கல்

தேசிய கல்வி உதவித் தொகை பெற்று தர பெரும்பாலான பள்ளிகள் விண்ணப்பிக்காததால் 7 ஆயிரம் மாணவர்கள் உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டமான தேசிய வருவாய் வழி திறன் தேர்வு மூலம் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தகுதி தேர்வுகள் வைக்கப்படுகிறது. அதில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுContinue reading "பள்ளிகள் விண்ணப்பிக்காததால் 7,000 மாணவர்கள் உதவித் தொகை பெறுவதில் சிக்கல்"

புதிய கல்விக் கொள்கை குறித்து 2,00,000 கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன

புதிய கல்விக்கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கைக்கு இம்மாத இறுதியில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும், அந்த அறிக்கை நவம்பர் மாதம் 11- ஆம் தேதி வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 2017 ஆம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதில் இந்தி கட்டாயம்Continue reading "புதிய கல்விக் கொள்கை குறித்து 2,00,000 கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன"

இந்த வாரத்திற்குள் அறிவிப்பு -ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு ?

பள்ளிக்கல்வி துறை மூலம் நடைபெற இருந்த ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த வாரம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்றது. அதிலும் குளறுபடிகள் நடந்ததால் இடைநிலை ஆசிரியர் பணிநியமன ஆணைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைக்கப்பட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு காலாண்டு விடுமுறையில் நடத்தப்படும் என அறிவித்தது. நீதிமன்ற உத்தரவால் மூன்றாண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு ஓராண்டு காலம் பணிபுரிந்தால் போதும் எனContinue reading "இந்த வாரத்திற்குள் அறிவிப்பு -ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு ?"

Flash News : TRB – கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் கூடுதல் அவகாசம் கேட்டதை அடுத்து இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வு செல்லாது என அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் 5 பேர் வழக்கு தொடர்ந்தனர். அதில், கணினி ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பாணையில் தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜூன் மாதம் 23, 27Continue reading "Flash News : TRB – கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்"

Design a site like this with WordPress.com
Get started